Saturday, March 28, 2009

பனை மரம்.. தென்னை மரம்.. வாழை மரம்


பனைமரத்துக்கு ஒரு தரம் தண்ணீர்
பாய்ச்சி விட்டால் போதும் - அது
தனை வளர்த்து தலையில் நுங்கினைத்
தந்து விளையாடும்

தென்னை மரத்துக்கு தினசரி கொஞ்சம்
தீர்த்தம் விட வேணும் -அந்த
தீர்த்தம் இளனீரைச் சேர்த்துக் கொண்டு வரும்
காத்திருக்க வேணும்

வாழை மரத்துக்கு அடிக்கடி தண்ணீர்
வார்த்த பின்னாலடியோ - அது
பூவைப் பழத்தை இலையைக் கொடுப்பது
போட்ட கடனடியோ

(பனை)

மக்களிலே பனை தென்னை வாழை என
மூன்று வகைகளுண்டு - அவர்
நன்றியிலும் செய்யும் நன்மையிலும் இந்த
மூன்று விதங்களுண்டு - அது

(பனை)

நல்ல உறவுகள் என்றோ செய்ததை
ஞாபகம் வைத்திருக்கும் - அது
நல்லதைச் செஇதிட நேரத்திலே
வாசலில் காத்திருக்கும்.. தலை
வாசலில் காத்திருக்கும்
அது என்ன மரம்.. அது பனை மரம்

சின்ன உறவுகள் கொடுக்கும் கையை
தினம் எதிர்பார்க்கும் - நாம்
செய்து செய்து அலுத்த பின்பே
அது நம்மைக் காக்கும்
அது என்ன மரம்.. அது தென்னை மரம்

தீய உறவுகள் என்ன கொடுத்தும்
திருப்தி கொள்வதில்லை - நாம்
திரும்பத் திரும்ப அள்ளிக் கொடுத்தால்
கை விடுவதில்லை..
அது என்ன மரம்.. அது வாழை மரம்

இந்த மரத்தில் எந்த மரத்தை
சொந்தம் கொள்வீரோ - நீங்கள்
எந்த மரத்தைப் போல் இருந்து
நன்றி கொள்வீரோ..

நீங்க என்ன மரம் ?
நாங்க பனை மரம்..

0 comments: