Tuesday, September 29, 2009

இயற்கை முறையில் முட்டைக் கோசு சாகுபடி

இயற்கை முறையில் முட்டைக் கோசு சாகுபடி: நாற்றங்கால்: நிலத்தை நன்கு பண்படுத்தி ஒரு மீட்டர் அகலம், 15 செ.மீ. உயரம், தேவைக் கேற்ப நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து 1 சதுர மீட்டருக்கு 2 கிலோ தொழு உரம் இடுவதற்கு முன்பு 200 கிராம் மண்புழு மட்கு உரம், 40 கிராம் மைக்கோரைசா வேர் <உட்பூசணம், 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகிய வற்றை கலந்து இடவேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண் டும். 40-45 நாட்களில் நாற்றுக்கள் தயாராகிவிடும். ஏக்கருக்கு விதை அளவு 150 கிராம்.

விதை நேர்த்தி: முட்டைக்கோசு விதைகளை 3 சதம் தசகவ்யா, 10 சதம் சாண மூலிகை உரம் மற்றும் 5 சதம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றின் கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்து பின் நன்கு உலரவைத்து விதைக்க வேண்டும். நாற்றுக்களை பிடுங்கி நடுவதற்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 5 சதம் கரைசலில் வேர்களை நன்கு நனைத்து நடவு வயலில் நடவேண்டும்.

நடவு வயல் தயாரிப்பு: நிலத்தை நன்கு பண்படுத்த வேண்டும். பின் ஏக்கரில் 12 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நன்கு கலக்க வேண்டும். மேலும் 75 கிராம் கொம்பு சாண உரத்தை 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து மண்ணில் தெளிக்க வேண்டும்.

உரமிடுதல்: ஏக்கருக்கு இயற்கை உயிராற்றல் மட்கு உரம் 2 டன், மண்புழு மக்கு உரம் 1 டன், வேப்பம் புண்ணாக்கு 200 கிலோ நிலம் தயாரிக்கும்போது இடவேண்டும். நடும்போது பார்களில் 2 கிலோ வீதம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

நடவு: வாளிப்பான நாற்றுகளை வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 40 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடும்பொழுது 1 ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை 2 பொட்டலம் அசோஸ் பைரில்லம் மற்றும் 2 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவையை 4 முதல் 6 லிட்டர் நீரில் கரைத்து நாற்றுக்களின் வேர்பாகத்தை 20 நிமிடம் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

நீர் பாய்ச்சுதல்: நடவு செய்த பின் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மழை இல்லாதிருப்பின் 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர் பாதுகாப்பு: வெட்டுப்புழுக்கள்: கோடைகாலத்தில் விளக்கு பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழித்தும், தெளிப்பு நீர் பாசனம் மூலம் வயலுக்கு நீர் பாய்ச்சி புழுக்கள் தண்ணீரின் மேல் மிதக்கும்போது பறவைகள் அவற்றை எடுத்து உண்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

அசுவினி பூச்சியைக் கட்டுப்படுத்த நெட்டில் இலைச்சாறு 10 சதம் கரைசலை 45, 60 மற்றும் 75வது நாட்களில் இலைவழி தெளிக்க வேண்டும். வெள்ளைப்புழுக்கள், வெள்ளை ஈ ஆகியவற்றை விளக்குப்பொறி வைத்தும், புழுக்களை கையால் பொறுக்கியும், வெள்ளை ஈயை விளக்கெண்ணெய் தடவப்பட்ட மஞ்சள் நிற குடங்களை ஒட்டுப் பொறியாக்கிக் கொண்டு 4 முறை 1 வார இடைவெளியில் பிடிக்க வேண்டும்.

நோய்களைக் கட்டுப்படுத்த டிரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஏக்கருக்கு 1 கிலோ வீதம் இடுவதன் மூலம் வேர் அழுகல், வாடல், நூற்புழுக்கள், இலைப்புள்ளி மற்றும் கருகல்நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். (தகவல்: த.செல்வராஜ், க.வ.ராஜலிங்கம், சி.அனிதா, வணிக தோட்டக்கலை நிலையம், ஊட்டி-643 001. போன்: 0423-244 2170)

Monday, September 28, 2009

கறிக்கோழி வளர்ப்பு

கோழிக்கறி வகைகளில் அதிகம் விரும்பப்படுவது கறிக்கோறி (ப்ராய்லர்) வகையாகும். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் எந்தவித சிரமமும் இல்லை. மிருதுவான, மென்மையான சதையை உடைய 1.5-2.0 கிலோ எடையுள்ள 8 வார வயதிற்கு கீழ் உள்ள கோழிகளை ப்ராய்லர் என்கிறோம்.

சிறந்த பராமரிப்பு முறைகள்

கோழிக் கொட்டகையின் வெப்பநிலை: முதல் வாரத்தில் 950 சி இருக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு வாரமும் 50 சி வெப்பத்தை குறைக்க வேண்டும். 6-ஆவது வாரம் 700 சி வெப்பம் வரும் வரை குறைக்க வேண்டும்.

காற்றோட்ட வசதி : கோழிக் கழிவிலிருந்து வெளிப்படும் அமோனியாவை நீக்கி மூச்சுத்திணறல் வராமல் தடுக்க நல்ல காற்றோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்.

மின்விளக்கின் மூலம் வெப்பம் அளித்தல்: 200 சதுர அடி தரையளவிற்கு 60 வாட் விளக்குகள் போட வேண்டும்.

தரை இடஅளவு : ஒரு கோழிக்கு 1 சதுர அடி

மூக்கு வெட்டுதல்:1 நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு மூக்கை வெட்ட வேண்டும்.

கறிக்கோழி (ப்ராய்லர்) சுகாதாரப் பராமரிப்பு

· நோயற்ற குஞ்சுகளைக் கொண்டு தொடங்க வேண்டும்

· மேரக் நோயைத் தடுக்க குஞ்சு பொறிப்பகத்திலேயே தடுப்பூசி போடவேண்டும்.

· 4-5 நாட்களில் ஆர்.டி.வி.எப். 1 போட வேண்டும்.

· கழிச்சல் (காக்கிடியாசிஸ்) நோயினைத் தடுக்க தீவனத்துடன் மருந்துகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.

· பூஞ்சாண நச்சுகளிலிருந்து தீவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.

· தரையில் 3 இஞ்ச் ஆழத்திற்கு நிலக்கடலை கழிவு அல்லது நெல் உமி கொண்டு நிரப்ப வேண்டும்.

விற்பனை செய்தல்

· 6-8 வாரங்கள் வயதுடைய கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.

· கோழிகளைப் பிடிக்கும் போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க, தீவனத் தட்டுகளையும், தண்ணீர் தட்டுகளையும் அகற்ற வேண்டும்.

· திடீர் வானிலை மாற்றங்களிலிருந்து கோழிகளைக் காக்க வேண்டும்.

சுகுணா (கோயமுத்தூர்), வெங்கடேஸ்வரா (பூனா), பயனியர், ப்ரோமார்க்போன்ற தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் விவசாயிகளுடன் இணைந்து கறிக்கோழி உற்பத்தி செய்கின்றன. மேலும்,

· சிறந்த இனங்கள் கிடைக்குமிடம்

· கோழிக் கொட்டகை அமைத்தல்

· தீவனம் அளித்தல்

· நல்ல வளமான கோழிகளை உருவாக்குதல்

போன்றவற்றில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பகத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

Sunday, September 27, 2009

புதிய ரகம் கத்தரி,முந்திரி,ஆமணக்கு.

புதிய கத்தரி ரகம் - கோ.பி.எச்.2.: தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திற்கும் உகந்த இப்புதிய ரகம் 120-130 நாட்களில் மகசூல் தர வல்லது. மே - அக்டோபர் மற்றும் ஜனவரி முதல் ஜுன் மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்றது. உக65 மற்றும் ணீதண்ட தttச்ட் ஆகிய ரகங் களின் ஒட்டு ரக கலவையாக வேளாண் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரக முந்திரி -/ விஆர்ஐ (சிடபிள்யூ) எச்.1: தமிழகத்தின் முதல் ஒட்டு ரகமாக முந்திரி யில் உருவாக்கப் பட்டுள்ள இப்புதிய ரகம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிர் செய்ய உகந்தது. பெரிய முந்திரி பருப்பு மற்றும் கொட்டைகள் கொண்டதாகவும் எளிதாக உடைக்கும் வண்ணம் இப்புதிய ரகம் தொடர் வேளாண்மை ஆராய்ச்சிகள் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரக ஆமணக்கு (ஒய்ஆர்சிஎச்.1): தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய ரகம் முந்தைய ரகத்தை காட்டிலும் 27 சதவீதம் அதிகளவு மகசூல் தரவல்லது. வீரிய ஒட்டு ரகமான இப்புதிய ரகம் குறைந்தளவு நீர்ப் பாசனம் மற்றும் மானாவாரி நிலங்களில் பயிர் செய்ய ஏற்றது. 150 முதல் 160 நாட்கள் வரை கால அளவை கொண்ட இப்புதிய ரகம் 1861 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் மகசூல் தரவல்லது. (தகவல் . டாக்டர் தி.ராஜ்பிரவீன், விரிவுரையாளர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 608002)

Saturday, September 26, 2009

மாவட்ட ஆட்சியரின் கேள்விகள் மற்றும் விவசாயிகளின் பதில்கள்

(1) உங்கள் கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு போதிய நீர் ஆதாரங்கள் இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? இருக்கிறது எனில் என்ன நீர் ஆதாரங்கள்?
i) ஆறு
ii) ஏரி/குளம்
iii) கிணறு
iv) மழைநீர்
இல்லையெனில் எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இப்பொழுது இதை சரிபடுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி என்ன? அரசிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மாவட்டத்தில் பெரும்பாலும் ஏரி, குளம், கிணறு மற்றும் மழைநீர் ஆகிய நீர் ஆதாரங்களைக் கொண்டே விவசாயம் செய்யப்படுகிறது. ஆறு மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரப்பட வேண்டும். மழைநீரைத் தேக்கிட வேண்டி கசிவு நீர்க்குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். விவசாயத்திற்கென உதவிட தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி துவக்கி செயல்படுத்தப்பட வேண்டும்.

(2) உங்களது நிலத்தில் வேளாண்மை செய்திட தேவையான அளவிற்கு மண்வளம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா? இல்லையெனில் என்ன காரணம் என்ன நினைக்கிறீர்கள்? அதை நிவர்த்தி செய்வதற்கு உங்களது முயற்சி என்ன? அரசிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மண்வளம் உள்ளது. பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை ஈடுகட்ட கால்நடை எரு இடுவதற்கு கால்நடை வளர்ப்புத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். பசுந்தீவன விதைகளை துறை மூலமாக இலவசமாகவோ, மானியத்திலோ வழங்க வேண்டும். வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலமாக கிராமங்களில் மண் ஆய்வுக்கூடங்கள் அமைத்து, விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் முறைகள் குறித்த பயிற்சிகள் அளித்து, ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் முறைகளை செயல்படுத்த வேண்டும்

(3) உங்களுக்கு தரமான விதைகள் கிராமங்களில் தேவையான நேரத்தில் தேவையான அளவில் கிடைக்கிறதா? இல்லையெனில் அதை நிவர்த்தி செய்திட உங்களது முயற்சி என்ன? அரசிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பெரும்பாலும் விவசாயிகள் விருப்பப்படும் விதைகள் கிடைப்பதில்லை. எனவே தற்போதைய நிலையைவிட சிறப்பாக செயல்படுத்த, துறை மூலமாகவும், கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் விவசாயிகளின் விருப்பத்திற்கும் அந்தந்தப் பகுதிகளுக்கும் தேவையான தரமான வீரிய இரக விதைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதிலும் அந்தந்த கிராமங்களிலேயே, உரிய பருவகாலத்திற்குள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

(4) உங்களது கிராமத்தில் உங்களது பயிர்களுக்கு தேவையான உரம் தேவையான அளவில் கிடைக்கிறதா? இல்லையெனில் இதை நிவர்த்தி செய்வதற்கு உங்களது முயற்சி என்ன? சரிசெய்யப்படுவதற்கு அரசாங்கத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

தேவையான உரங்கள் தேவையான அளவில் கிடைப்பதில்லை. கிராமங்களில் கூட்டுறவு சங்கங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு சாகுபடி பரப்பிற்கேற்ப தேவையான உரங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை உரங்கள், பசுந்தாள் உங்கள் மற்றும் மண்புழு உர பயன்பாடு குறித்த வழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பதையும், தரமற்ற உரங்கள் விற்பதையும் தடுக்க வேண்டும்

(5) இயற்கை வேளாண்மை முறை உழவர்களுக்கு பொருளாதார ரீதியில் சரியான என கருதுகிறார்கள்? இல்லையெனில் இதை நிவர்த்தி செய்வதற்கான உங்களது முயற்சி என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

சரியான முறைதான். இதற்காக கறவைமாடுகள் மற்றும் கால்நடைகள் வாங்கிட கடனுதவி மற்றும் மானியங்கள் வழங்கப்பட வேண்டும். துறை அலுவலர்கள் மூலம் கிராமங்களில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் டான்வாப் சுய உதவிக்குழுக்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு இயற்கை வேளாண் விளைபொட்கள் விஷமற்றது என்பதற்கும், நஞ்சு கலந்த மரபணுமாற்ற உணவுப் பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை அரசு விளம்பரங்கள் மூலம் உணர்த்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மை விளைபொருட்களுக்கு நல்ல விளை கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

(6) உங்களது நிலங்களில் பயிர்செய்வதற்கு தேவையான அளவிற்கு கடன் வசதி செய்து கொடுக்கப்படுகிறதா? இல்லையெனில் உங்களது முயற்சி என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பெரும்பாலும் கடன் கிடைப்பதில்லை. அப்படியே கடன் கொடுத்தாலும், மிகக் குறைவான தொகை, பயிர் சாகுபடி சமயத்தில் கிடைக்காமல், காலதாமதமாகவே வழங்கப்படுகிறது. இப்பிரச்சினைகளை நிவிர்த்தி செய்து, கிராமங்களில், கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினர்களாக சேர்த்து, பழைய கடன்தாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவு கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

(7) விவசாயத்தொழிலாளர்கள் உங்கள் கிராமத்தில் பயிர் செய்திட தேவையான அளவில் கிடைக்கிறர்களா? இல்லையெனில் இதை நிவர்த்தி செய்வதற்கு உங்களது முயற்சி என்ன? அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. எனவே வேளாண்மைத்துறை மூலம் உழவு, பார் பிடித்தல் மற்றும் அறுவடை ஆகிய பணிகளுக்குத் தேவையான நவீன, தரமான இயந்திரங்களை அதிக மானியத்துடன் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கருவிகளை டான்வாப் சுயஉதவிக்குழுக்கள் மூலம் வழங்கி அந்தந்தப் பகுதிகளில் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் கிராமங்களில் உழவர் மன்றங்கள் அமைத்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து தேவைக்கேற்ப முன்னுரிமை வழங்கி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம்.

(8) நீங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களுக்கு உரிய நியாயமான விலை உங்களது கிராமத்தில் கிடைக்கிறதா? இல்லையெனில் உங்களது முயற்சி என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

நியாயமான விலை கிடைப்பதில்லை. தானிய ஈட்டுக்கடன் வழங்க வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டியுள்ளதால் நியாயமான விலை கிடைப்பதில்லை. உள்ள10ர் வியாபாரிகள் கூட்டுசேர்ந்து கொண்டு, வெளியூர் வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாலும், நல்ல விலை கிடைப்பதில்லை. கூட்டுறவு சங்கங்கள் மூலம், உரிய விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை பொருட்களை சேமித்து வைக்க குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகள் அமைக்க வேண்டும். மரவள்ளிக்கு ஆலை அதிபர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூடி பேச்சு வார்த்தை நடத்தி விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்

(9) விவசாயத்தினை கூடுதலாக லாபம் தரக்கூடிய ஒரு தொழிலாக மாற்றுவதற்கு என்ன முயற்சிகள் நீங்கள் எடுக்கிறீர்கள்? எதை எல்லாம் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கிறீர்கள்?

துல்லிய பண்ணைய திட்டத்தின் மூலமும், இயற்கை மற்றும் பசுந்தாள் உர பயன்பாடு குறித்தும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு போன்ற தொழில்களை அரசாங்கம் கிராமங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும். மின்வசதி, நீர்நிலைகள் ஆகியன ஏற்படுத்தி தரப்பட வேண்டும். விளைபொருட்களுக்கு நியாயமான நல்ல விலை நிர்ணயித்து ஊக்குவிக்க வேண்டும். விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற மண்வளம், உர நிர்வாகம், பூச்சி கொல்லி நிர்வாகத்தில் இயற்கை முறையை கடைபிடிக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும். 'ஓர் ஊர் ஓர் விவசாயம'; என அறிவிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மாதம் ஒருமுறை வயல்களை நேரிடையாக பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

(10) தமிழக அரசு அறிவித்து செயல்படும் துல்லிய பண்ணையம் திட்டத்தால் கூடுதலான விளைச்சல் பெறுவது பற்றி நீங்கள் அறிவீர்களா? அறிவீர்களேயானால் நீங்கள் கையாளுகிறீர்களா? இல்லையெனில் ஏன் செயல்படுத்தவில்லை?

ஆம், அறிந்துள்ளோம். பிற மாவட்டங்களில் உள்ள வசதிகள், மானியங்கள், நமது மாவட்டத்திற்கும் தேவை. வேளாண் கருவிகள், இயந்திரங்கள் ஒன்றியங்களில் வழங்கப்பட வேண்டும். செலவு அதிகமாக உள்ளதால், கூடுதல் மகசூல், கூடுதல் செலவு என சரியாகிவிடுகிறது. எனவே இதனை சிறு விவசாயிகள் நடைமுறைப்படுத்துவது கடினம். இதுகுறித்து துறை அதிகாரிகள் கிராமங்களில் முகாமிட்டு ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

(11) செம்மை நெல் சாகுபடியால் பெறக்கூடிய கூடுதலான பலன்களை நீங்கள் அறிவீர்களா? அறிவீர்களேயானால் நீங்கள் அதனை கையாளுகிறீர்களா? இல்லையெனில் ஏன் கையாளவில்லை? இதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம், அறிவோம். சிறப்பாக உள்ளது. நேரடி நெல் விதைப்பு முறையையும் கையாண்டு நல்ல மகசூலை குறைவான செலவில் பெற்றோம். நல்ல பலன் கிடைக்கிறது. மேலும் கூடுதல் பலன்களை பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமங்களில் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்க வேண்டும். வயல்களுக்கு சென்று ஆலோசனைகள் வழங்க வேண்டும். நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் இதனை செயல்படுத்த பாசன வசதி ஏற்படுத்த உதவ வேண்டும். மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும், விவசாயிகளை தேர்ந்தெடுத்து, அவர்களது பண்ணைகளிலேயே பயிற்சிகள் வழங்கி, திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

(12) விவசாயிகளின் வேளாண்மை முயற்சியில் இயந்திரங்களைக் கொண்டு உபயோகப்படுத்தி செலவுகளை குறைத்திட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? விவரத்தை தருக

ஆம். கண்டிப்பாக நம்புகிறோம். இயந்திரங்கள் செலவினத்தைக் குறைக்கின்றன. வேளாண்மைத்துறை மூலம் அனைத்துப் பணிகளுக்குமான இயந்திரங்களையும் குறைந்த வாடகையில், குறிப்பிட்ட காலங்களில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த இயந்திரங்களுக்கான டீசலை மானிய விலையில் வழங்கிட வேண்டும். இயந்திரங்கள் நிலங்களுக்கு எளிதாக கொண்டு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். மானிய விலையில் கருவிகள் விநியோகிக்கப்பட வேண்டும்

(13) கலப்பு பண்ணையம் (வேளாண்மையுடன் கால்நடை செல்வங்களை வளர்த்தல்) மூலமாக வருவாயை அதிகரிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? விவரம் தருக.

ஆம். கண்டிப்பாக முடியும். நிச்சயமாக நம்புகிறோம். கால்நடைகள், கோழி வளர்ப்பு, மண்புழுக்கள் வளர்ப்பு என்ற துணைத் தொழில்களைக் கையாண்டு, தற்சார்பு வேளாண்மையில் ஈடுபட்டு நல்ல முறையில் வருமானம் ஈட்டலாம். ஏந்த இலவச அறிவிப்பையும் எதிர்நோக்க வேண்டியதில்லை. ஏனெனில் பால் உற்பத்தி மூலம் தினசரி வருமானமும், கோழி வளாப்பில் 3 மாதத்திற்கு ஒருமுறை வருமானமும், ஆடு வளர்ப்பில் 6 மாதத்திற்கு ஒருமுறை வருமானமும், மண்புழு உற்பத்தியில் ஓராண்டிற்கான உரச்செலவு மிஞ்சுவதாலும் லாபகரமானதாக உள்ளது. எனவே ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வாங்கிட கடன் வழங்கிட அரசு முன்வர வேண்டும்

(14) உங்கள் கிராமத்தில் நீங்கள் பாரம்பரியாக செய்யக்கூடிய பயிருக்கு பதிலாக மாற்றுப் பயிர் (மூலிகைää ப10ச்செடிகள் மரங்கள்ää பழ வகைகள்) கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.

நம்புகிறோம். அரசு நடவடிக்கை எடுத்து திட்டத்தை செயல்படுத்தும் போதுதான் விவசாயிகளுக்கு பலன்கள் சென்றடையும். அரசின் மூலம் மூலிகைப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் மூலிகை பயிர்களின் பலன்கள் குறித்து பொதுமக்களுக்கும், பயிர் சாகுபடியில் உள்ள பலன்கள் குறித்து விவசாயிகளுக்கும் அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் உற்பத்தியை சந்தைப்படுத்துதல், பயன்பாடு, விலை உத்தரவாதம் குறித்தும் அரசு உறுதி அளிக்க வேண்டும். எனினும் உணவு உற்பத்தியை விடுத்து, வருவாய்க்கென மாற்றுப் பயிர் சாகுபடிக்கு சென்று, இருப்பதையும் இழந்துவிடும் நிலை தேவையானதா என யோசிக்க வேண்டும்.

(15) உங்கள் பகுதியில் விளைபொருட்கள் சேமித்து வைக்கக் கூடிய சேமிப்பு கிடங்கு உருவாக்கவேண்டுமென்று கோருகிறீர்களா? தேவையெனில் அதற்கான தங்களது முயற்சி என்ன? அரங்சாங்கத்திடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம். சேமிப்புக் கிடங்குகள் அவசியம் தேவை. அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். கிராமங்களில் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் சேமிப்பு கிடங்குகள் உருவாக்க வேண்டும். தனி நபர்கள் செயல்படுத்த அதிக மானியம் வழங்கினால் கிடங்குகளின் பராமரிப்பு நன்றாக இருக்கும். அரசின் திட்டம் என்னவென்று தெரியவந்தால் விவசாயிகள் இணைத்து செயல்பட முடியும். எனவே சேமிப்பு கிடங்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

(16) உங்கள் பகுதிகளில் நிலத்தடி நீர் வலுப்படுத்தப்படுவதற்கான கீழ்க்கண்ட முயற்சிகளை எடுக்கவேண்டுமென்று நீங்கள் நம்புகீறிர்களா?
(i) தடுப்பணை கட்டுதல்
(ii) ஏரி குளங்களை ஆழப்படுத்துதல்
(iii) கிணற்றிற்கு செயற்கைமுறையில் செறிவ10ட்டல்
(iv) பண்ணைக் குட்டைகள் அமைத்தல்
(v) மழைநீர் சேகரிப்பு அமைப்பு

ஆம். மேற்கண்ட முறைகளை நடைமுறைப்படுத்த அவசியம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(17) விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உருவாக்கவேண்டுமென்று எண்ணுகிறீர்களா? அதற்கான உங்களின் முயற்சி என்ன? அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம். அவசியம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். கிராமம் தோறும் அல்லது ஒன்றியம் வாரியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது இயங்கிவரும் விற்பனைக்கூடங்கள் சரியான முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிராமங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை விற்பனை ஏலம் நடத்தப்பட வேண்டும். விற்பனைக் கூடங்கள் அமைக்க நிதி ஆதாரம், கட்டிட வசதி மற்றும் அலுவலர்கள் நியமனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(18) நகர்ப்புற வளர்ச்சியாலும் தொழில் வளர்ச்சியாலும் கிராமப்புறங்களில் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதாக நீங்கள் கருதுகிறீர்களா? அதை தடுப்பதற்கான உளமார்ந்த உங்களது முயற்சி என்ன? அரசிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம். நகர்ப்புறத்தில் இருந்து வரும் கழிவு நீர் கிராமப்புற விவசாய நிலங்களுக்கு சென்று நிலத்தடி நீர்; மாசுபடுகிறது. எனவே நகர்ப்புற எல்லையை விட்டு தண்ணீர் செல்வதற்கு முன்பு தண்ணீரை சுத்தம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் தண்ணீர் செல்ல வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஓவ்வொரு தொழிற்காலையிலும் கழிவுநீர்; சுத்திகரிப்பு நிலையங்கள் கண்டிப்பாக இயங்க வேண்டும். பாசன வாய்க்கால்களில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

(19) கிராமப்புறங்களில் விவசாயிகள் பெறக்கூடிய சொற்ப வருவாயையும் நகர்ப்புறங்களில் செலவழிக்கப்படுகிறது. அதன்விளைவாக கிராமப்புறங்களில் பணப்புழக்கம் ஒன்றுமே இல்லை. கிராமப்புறத்தில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான வழி என்ன?

கிராமப்புறங்களில் பணப்புழக்கத்தைப் பெருக்க வேளாண் விளை பொருள் சந்தைகளை கிராமங்களுக்கு கொண்டு வர வேண்டும். நகரங்களில் கிடைக்கும் வசதிகளை கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். நுகர்வு கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு அவசியம். இயற்கையான வாழ்க்கை இனிக்கும் என்பதை சிறு குழந்தை முதல் பழக்கப்படுத்த வேண்டும். ஓவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஓர் அரசு அலுவலகம் கண்டிப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் வங்கிகள் துவங்கப்பட வேண்டும். விளைபொருட்களை லாப முறையில் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி, பால் உற்பத்தி, கால்நடைகள் மற்றும் பறவைகள் உற்பத்தி மூலம் இறைச்சி உற்பத்தி, மலர்கள் சாகுபடி போன்ற தொழில்களை உருவாக்குவதன் மூலம், விற்பனையில் நாள்தோறும் நகர நுகர்வோரிடமிருந்து கிராமங்களுக்கு வருவாய் வரும். பணப்புழக்கம் இருக்கும். கிராமங்களில் வேளாண் விற்பனை நிலையங்கள் துவக்கி செயல்படுத்தினால், நகர மக்கள், கிராமங்களுக்கு வந்து விளைபொருட்களை வாங்கி செல்கையில் பணப்புழக்கம் பெருகும். சிக்கனம் மற்றும் சேமிப்பு முறைகளை கிராம மக்களுக்கு உருவாக்க வேண்டும்.

(20) கிராமப்புறங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி வெளியேறும் சூழல் இருக்கிறதே அதற்கு முக்கியமான காரணங்கள் என்ன? இந்த நிலை மாற்றுவதற்கு உங்களது முயற்சி என்ன? அரசாங்கத்திடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

பொருளாதாரம், தொழில், வேலைவாய்ப்பு காரணமாக வெளியேற வேண்டியுள்ளது. கிராமங்களில் சிறுதொழில் மற்றும் கைத்தொழில்களை உருவாக்க வேண்டும். வருவாய் குறைவு, நகரங்களில் அதிக கூலி, பொழுது போக்கு அம்சங்கள் காரணமாக வெளியேற வாய்ப்புள்ளது. இவை கிராமங்களில் உருவாக்கப்பட்டால், நகரங்களை நோக்கி யாரும் செல்லமாட்டார்கள். விவசாயத்தில் வருவாய் குறைவால் ஆர்வமும், ஆதரவும் குறைந்து கிராமத்தை விட்டுச் செல்ல நேரிடுகிறது. குல்வி கற்றோர் எல்லாம் வயலுக்குள் கால் பதிக்காமல், நகரத்தை நோக்கிச் செல்கின்றனர். முக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கிராமத்திலேயே கிடைத்தால் யாரும் வெளியேற வாய்ப்பில்லை. குல்வி மற்றும் மருத்துவ வசதிகள் நகரங்களில் அதிக அளவில் கிடைப்பதே கிராமத்தை விட்டுச் செல்லக் காரணம்

(21) கிராமப்புறங்களில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள் அவர்கள் கிராமங்களுக்கு வந்து குறிப்பாக விவசாயிகளுடைய பிரச்சினைகளை அறிந்து தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கிறார்களா என்று நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையெனில் விவரம் தருக.

கிராமங்களில் பணிபுரிவோர் எவரும் அங்கு தங்குவதில்லை. அரசுப் பணியிலிருப்பதற்காக மட்டுமே கிராமங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அங்கு தங்கிட ஏதுவாக அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். வற்புறுத்தலின்பேரில் செயல்படாமல் சுய ஆர்வத்துடன் அவர்களை செயல்பட வைக்க வேண்டும். அதிகாரிகள் கிராமத்தில் தங்கி செயல்பட்டு, மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து நன்மை செய்ய பாடுபட வேண்டும்.

(22) அரசின் எந்த துறையிடமிருந்து விவசாயிகளின் மேம்பாட்டிற்கு அதிக அளவிற்கு பணிகளை எதிர்பார்க்கிறீர்கள்? அவை எந்தவகையில் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

தற்போதுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளதால், நிதித்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, மின்சார வாரியம், கூட்டுறவுத்துறை உட்பட அனைத்து துறைகளும் கிராமங்களுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து அவர்களது குறைகளை நிவிர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.

(23) பாடுபடும் விவசாயிகளும் - பணியாற்றும் அரசு அலுவலர்களும் உளமாற ஒன்றுசேர்ந்து முயற்சித்தால் கிராமங்களின் வளர்ச்சி சாத்தியம் என நீங்கள் நம்புகிறீர்களா? விபரம் தருக.

ஆம். நிச்சயம் கிராமங்கள் உயரும். பாடுபடும் விவசாயிகளும், பணியாற்றும்; அரசு அதிகாரிகளும் உளமாற ஒன்றுசேர்ந்தால் இந்திய வேளாண்மை உயரும். நீடித்த, நிலைத்த தன்மையிலான வேளாண்மை வளர்ச்சி இருக்கும். கிராமத்திற்கு வந்து அடிக்கடி அதிகாரிகள் மக்களை சந்தித்தால் கிராம வளர்ச்சி சாத்தியமடையும். கிராமத்திற்கு வந்து விவசாயிகளை சந்திப்பதே அவமானம் என்று அதிகாரிகள் நினைக்கும் நிலை மாற வே;ணடும். தொழில்கூடங்களை அதிக அளவில் கிராமப்புறங்களில் அமைக்க வேண்டும். கிராமப்புறங்களில் குடியிருக்கும் ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரிகள் கிராம மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு அதிகாரிகள், மனித நேயம், தியாக உணர்வு, கடமை உணர்வு மற்றும் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும். 'பாரத நாடு பழம்பெரும் நாடு, விவசாயிகளே இதற்கு முதுகெலும்பு' என்ற சொல் நிறைவேறும். இது சாத்தியம் மட்டும் அல்ல சத்தியமும் கூட.

மிளகாய் அதிக மகசூல் பெற....

மிளகாய் சாகுபடியிலதொழில் நுட்பத்தை கடைபிடித்தஅதிக மகசூல் பெறலாம் என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொழில் நுட்பத்தை சரியாக கடைபிடித்து, மிளகாய் பயிரில் நல்ல மகசூல் பெறலாம். அதன்படி வடிகால் வசதியுடைய நிலத்தில் மிளகாய் பயிரிட வேண்டும். 24 மணி நேரத்திற்கு மேல் நீர் தேங்கி நின்றால் செடியின் வேர்கள் அழுகி விடும்.

கே-1, கே-2, கோ-1, கோ-3, பி.கே.எம்.-1 ஆகிய சம்பா ரகம் கோ-2 பி.எம்.கே-1, பி.எல்.ஆல்-1 ஆகிய குண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் சாகுபடி செய்யலாம்.

உயர் விளைச்சல் ரகங்களுக்கு ஹெக்டருக்கு ஒரு கிலோவும், வீரிய ஒட்டு ரகங்களுக்கு ஹெக்டருக்கு 250 கிராம் வீதம் விதை பயன்படுத்தி நாற்று விட வேண்டும்.

மிளகாய் நாற்றங்காலுக்கு மேட்டுப்பாத்திகள் 1 மீட்டர் அகலமும், 3 மீட்டர் நீளமும் 15 சென்டி மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு செண்டு நாற்றங்காலுக்கு மக்கிய தொழு உரம் 75 கிலோ இட வேண்டும்.

விதைகளை ஒரு கிலோவிற்கு 4 கிராம் வீதம் டிரைக்கோடர்மா விரிடி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பாத்திகளில் விதைகளை 2 சென்டி மீட்டர் ஆழத்தில் 10 சென்டி மீட்டர் இடைவெளியில் வரிசையில் விதைக்க வேண்டும். விதைத்த பிறகு வைக்கோல் அல்லது காய்ந்த இலைகளை பாத்திகளின் மேல் பரப்ப வேண்டும். பின்பு பூவாளியின் உதவியால் நீர் ஊற்றி வர வேண்டும்.

நாற்றங்காலில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த 15 நாட்கள் இடைவெளியில் புளுகாப்பர் 2.5 கிராம் மருந்தினை ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். நாற்று பிடுங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு ஒரு செண்டு நாற்றங்காலுக்கு 250 கிராம் பியூரடான் குருணை மருந்தினை இட வேண்டும். இதனால் நூற்புழு மற்றும் இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

நிலத்தை 4 முறை உழுது கடைசி உழவின் போது ஹெக்டேருக்கு 25 டன் நன்கு மக்கிய தொழு எரு கலந்து கடைசி உழவில் இட வேண்டும். உயர் விளைச்சல் ரகங்களுக்கு 40 X 45 X 30 சென்டி மீட்டர், வீரிய ஒட்டு ரகங்களுக்கு 60 X 75 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

மேலும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்களை தலா ஒரு கிலோ வீதம் 10 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். இவ்வாறு செய்வதால் தழைச்சத்து மற்றும் மண்ணில் உள்ள கிடைக்காத மணிச்சத்து கிடைக்கும். இதனால் பயிர் நன்கு வேர் பிடிப்பதுடன் வேகமான வளர்ச்சி அடையும்.

பயிருக்கு அடியுரமாக ஏக்கருக்கு 24 கிலோ மணிச்சத்து கிடைக்க 150 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ சாம்பல் சத்து கிடைக்க 20 கிலோ மூரியேட்டா ஆப் பொட்டாஷ் உரத்தினை இட வேண்டும். அத்துடன் தழை சத்தினை 3 முறை பிரித்து இட வேண்டும். நடவு பயிரில் நட்ட 30,60,90 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் 30 கிலோ யூரியாவை பிரித்து இட வேண்டும்.

கோடை காலங்களில் 7 நாட்களுக்கு ஒரு முறையும், மழைக்காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறதண்ணீக் பாசனம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Friday, September 25, 2009

இயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு: கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி

கடந்த சில ஆண்டுகளாக பயிர் வளர்ப்பு முறை வேதியியல் முறைக்கு மாறியுள்ளது. இத்தகைய வேதியியல் முறையில் அதிகப்படியான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகளின் பரிந்துரைக்கு அதிகமான பயன்பாட்டினால் மண்வளம் மற்றும் மகசூல் குறைதல், பூச்சிக் கொல்லி மருந்துக்கு எதிர்ப்பு தன்மை, நிலத்தடி நீர் மாசுபடுதல் மற்றும் சுற்றுப்புறசூழல் மாசுபடுதல் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இத்தகைய இரசாயன பொருட்கள் மூலம் மண்ணில் வாழும் பயன் தரக்கூடிய நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகின்றது. மேலும் இத்தகைய வேதிப்பொருட்களின் நச்சுதன்மை பயிர்களின் விதைகள் மற்றும் காய்கறிகள், பழங்கள் மூலம் சென்று மனிதனின் உடல் நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கு நோய்களையும் தோற்றுவிக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வாக அமைவது இயற்கை வேளாண்மையாகும். இயற்கை வேளாண்மை முறையில் பயிர் சாகுபடியை மேற்கொள்வதன் மூலம் சாகுபடி செலவு குறைகிறது. மேலும் அதிக மகசூல் பெறுவதுடன் மண்ணின் வளமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் மண்ணின் இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

இயற்கை வேளாண்மையில் கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வதன் மூலம் பயிர் மகசூல் அதிகரிக்கிறது. களைச்செடிகளின் எண்ணிக்கை கட்டுபடுத்தப்படுகிறது. ஊடு பயிர் மூலம் ஒரே பயிரை வளர்க்காமல் பல்வேறு பயிர்கள் பயிரிடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

இத்தகைய பயிர்கள் கவர்ச்சிப் பயிர்களாகவும் பயன்படுகின்றன. இவை பூச்சிகளைக் கவர்ந்து முக்கிய பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கின்றன. மேலும் இவற்றின் மூலம் காற்றில் உள்ள தழைச்சத்தை நிலைநிறுத்தி பயிர்களுக்கு ஊட்டம் அளிக்கின்றன. அதனால் மண்ணின் வளமும் மேம்படுகின்றன.

கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடியின் மூலம் கீழ்காணும் பயன்களைப் பெறலாம்.

* வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டை பயறு விதைக்க வேண்டும். இந்த தட்டை பயறில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும். இந்த பொறிவண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துகின்றன.

* நிலக்கடலையில் ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவு செய்வதால் புரோடீனியா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம்.

* நிலக்கடலையோடு 250 கிராம் கம்பு சேர்த்து கலப்பு பயிராக விதைத்து நிலக்கடலையை தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துபூச்சியின் சேதத்தை கட்டுப்படுத்தலாம்.

* 10 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை என்ற அளவில் ஊடு பயிராக செய்து பொறிவண்டுகளின் பெருக்கத்தை அதிகரிக்கலாம். சிவப்பு கம்பளிப்புழு தாக்குதல் காணப்படும் பகுதிகளில் 5 வரிசை நிலக்கடலைக்கு ஒரு வரிசை தட்டை பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.

* துவரை, பாசிப்பயறு ஆகியவற்றுடன் சோளம் ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் தத்துப்பூச்சி மற்றும் காய்ப்புழுக்களின் எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம்.

* பருத்தியின் ஓரங்களில் மக்காச்சோளம் பயிரிடுவதால் அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, அந்துபூச்சிகள் போன்றவை அச்செடி மேல் படும் போது ஊண் விழுங்கிகள் மக்காச்சோளம் பயிரில் அதிகமாக உற்பத்தி ஆவதால் இப்பூச்சிகள் பருத்தி செடிக்குப் பரவுவதை தடுக்க முடியும்.

* பருத்தியுடன் சூரியகாந்தியை 2.2 என்ற விகிதத்தில் பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பச்சைத் தத்துப்பூச்சியின் சேதம் குறைகிறது. பருத்தி அருகே பருத்தி குடும்பத்தை சேர்ந்த வெண்டை பயிர் செய்வதை தவிர்த்தல் நல்லது.

* பருத்தியில் பச்சைப் பயிர், உளுந்து, சோயாமொச்சை, ஆமணக்கு போன்ற பயிர்களை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பூச்சிகளின் பெருக்கத்தை குறைத்து சேதத்தைத் தவிர்க்கலாம்.

* சோளத்துடன் அவரையை 4:1 என்ற விகிதத்தில் விதைத்து சோளத்தண்டு புழுவின் சேதத்தையும், நிலக்கடலையுடன் கம்புபயிரை 6:1 என்ற விகிதத்தில் விதைப்பதன் மூலம் சுருள் பூச்சியின் சேதத்தையும் குறைக்கலாம்.

* கரும்பில் தக்கை பூண்டு ஊடுபயிராகப் பயிரிடுவதன் மூலம் கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுபடுத்தலாம்.

* மக்காச் சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புரொடினியா புழுக்களைக் கட்டுபடுத்த முடியும். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதன் மூலம் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்தலாம்.

* புகையிலைப் பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிடுவதன் மூலம் புகையிலை வெட்டு புழுக்களின் சேதம் கட்டுப்படுத்தப்படுகின்றன. பயிரில் பூச்சி நோய் விரட்டித் தாக்கும் வேம்பு, சீதா, நக்ஸ்வாமிகா போன்ற மரங்களை வரப்பில் நடலாம். செவ்வந்திப் பூ, கடுகு, ஆமணக்கு ஆகியனவற்றை பயிர்களைச் சுற்றிலும் வளர்த்துப் பூச்சிகளை விரட்டலாம்.

* கரையான்களை கட்டுபடுத்திட வெட்டிவேர், திருகுக்கள்ளி, எருக்கு, காட்டாமணக்கு ஆகிய செடிகளை வயலிலேயே ஆங்காங்கே வளர விடலாம்.

* வெங்காயத்தைத் தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுபடுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கைக் கவர்ச்சிப் பயிராகப் பயிரிட்டு அதில் காணப்படும் முட்டைக் குவியல்களையும் இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்.

* காய்கறிப் பயிர்களான முட்டைகோஸ், காலிஃப்ளவர் ஆகியவற்றுடன் கடுகு பயிரிடும் போது கடுகுச் செடி கவர்ச்சிப் பயிராக செயல்பட்டு வைர முதுகு அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்துகிறது.

* முட்டைக்கோசுடன் தக்காளி ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் வைர முதுகு அந்துபூச்சி மற்றும் இலைப்புழுவைக் கட்டுபடுத்தலாம். கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர்களை இருபது முதல் முப்பது நாட்களுக்கு முன்னரே பயிரிட வேண்டும்.

இவ்வாறாக கலப்புப் பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்வதன் மூலம் இயற்கை முறையில் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தி பயிர் மகசூலை அதிகரிப்பதோடு பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தைக் குறைத்து சுற்றுப்புற சூழலையும் சுகாதாரத்தையும் பேணிக் காக்கலாம்.

சாவ்கி வளர்ப்பு

சாவ்கி வளர்ப்பு என்றால் என்ன?

சாவ்கி என்றால் பட்டுப் பூச்சி வளர்ப்பின் முதல் இரண்டு நிலைகளாகும். சாவ்கி புழுக்கள் முறையாக வளர்க்கப்படாவிட்டால், கடைசி நிலைகளில் உயிரிழப்பு ஏற்படும். ஆகவே, பட்டுபுழுக்கள் வளர்ப்பில் சாவ்கிதான் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்த சமயத்தில்தான் அதிக அளவிலான வெப்பம், ஈரப்பதம், சுத்தமான சுற்றுப்புறம், தரமுள்ள துளிர் இலைகள், வளர்ப்பிற்குத் தோதான வசதிகள், எல்லாவற்றிற்கும் மேலாக தொழில்நுட்பத் திறன் வேண்டும்.

வியாபார ரீதியிலான சாவ்கி வளர்ப்பு மையங்கள்

மைசூரிலுள்ள மத்திய பட்டுவளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் (சி.எஸ்.ஆர்.டி.ஐ.) வியாபார ரீதியிலான “சாக்கி வளர்ப்பு மாதிரி மையம்” ஏற்படுத்தப்பட்டது. இது வருடத்திற்கு 1,60,000 நோயற்ற முட்டைகள் (dfls), அதாவது ஒரு சுழற்சிக்கு, 5000 வீதம், வருடத்திற்கு 32 சுழற்சிகளில் முட்டைகள் பொரிக்கும் வசதியை கொண்டிருக்கிறது. இந்த “மாதிரி மையத்தை” 2 வருடங்கள் வெற்றிகரமாக சோதனை முறையில் நடத்திய பிறகு, இதே மாதிரியான மையத்தை நாட்டில் பிற பட்டு வளர்க்கும் பகுதிகளில் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

வியாபார ரீதியிலான சாவ்கி வளர்ப்பு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்

வியாபார ரீதியிலான சாக்கி வளர்ப்பு மையத்தில், மல்பெரித் தோட்டம், சாக்கி வளர்ப்புக்குடில், வளர்ப்புக்கு உதவும் முக்கியமான உபகரணங்கள் ஆகியன தனித்தனியாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்சியளிக்கப்பட்ட அல்லது தொழில் திறனுள்ள பணியாட்கள், பட்டுவளர்ப்பில் அதுவும் விஞ்ஞான முறையிலான பட்டு வளர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் தேவை.

  • பட்டுப்புழுவின் முட்டைகள் தாவரத்திலிருந்து சேகரிக்கப்படவேண்டும்.
  • சாவ்கிவளர்ப்பு மையத்தைச் சுற்றிலும் குறைந்தபட்சம் 80 முதல் 100பட்டு உற்பத்தியாளர்களும், குறைந்தது 120 லிருந்து 150 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்ட மல்பெரி தோட்டங்களும் இருக்க வேண்டும்.

வியாபார முறையிலான சாவ்கி வளர்ப்பு மையத்தின் சாதக அம்சங்கள்

வலுவும் ஆரோக்கியமும் உள்ள இளம் புழுக்கள் வளர்க்கப்பட்டால்தான் பட்டுப்பூச்சிகள் நிலைத்திருப்பதற்கும், அதிக அளவில் கூடுகள் அமைவதையும் உறுதி செய்ய முடியும். வியாபார முறையிலான சாவ்கி வளர்ப்பு மையத்தின் முக்கிய நோக்கம்,

  • ஒரே மாதிரியானவையாகவும், ஆரோக்கியமாகவும் உள்ள பட்டுப்புழுக்களின் கூடுகளை உற்பத்தி செய்தல், இலை மாசுபடுவதையும், நோய்கள் பரபுவதற்கான வாய்ப்புகளையும் குறைத்தல்
  • முட்டைகளை சரியான விதத்தில் அடைகாக்க ஏற்பாடுகள் செய்து அதிக எண்ணிக்கையில் புழுக்களை பொரிக்க உதவுதல்
  • பட்டுப் புழுக்களை வளர்க்கும் போதே, சிறுபுழுக்கள் தொலைந்து உதிர்வதைத் தடுத்து உற்பத்தியை அதிகமாக்குதல்

சாவ்கி வளர்ப்பு பற்றி மேலும் விவரங்களுக்கும், இதில் அடங்கியுள்ள பிற நடைமுறை விஷயங்களைத் தெரிந்து கொள்ளவதற்கும், வர்த்தக முறையிலான மையத்திற்கு பதிவு செய்வதற்கும் கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதவும்.

உதவி இயக்குநர்,
மத்திய பட்டுப்புழு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்,
ஸ்ரீராம்புரா,
மைசூர்- 570008. தொலைபேசி - 0821-2362406, 2362440Assistant Director,
Central Sericultural Research and Training Institute,
Srirampura,
Mysore – 570 008
Ph: 0821-2362406 & 2362440

Thursday, September 24, 2009

செம்மை நெல் சாகுபடி செய்வது எப்படி? வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்

செம்மை நெல் சாகுபடி செய்வது எப்படி என்று வேளாண்மை உதவி இயக்குனர் ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.

இது தொட‌ர்பாஅவ‌ரவெ‌ளி‌யி‌‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட‌ப்ப‌ட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் ஒன்றை நாற்று நடவு முறை என்றழைக்கப்படும் செம்மைநெல் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.

செம்மை நெல் சாகுபடி முறைக்கு ஏ.டி.டி. 38, 39 போன்ற அனைத்து ரகங்களையும் பயன்படுத்தலாம். செம்மை நெல் சாகுபடி முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ சான்று பெற்ற விதை நெல் போதுமானது.

ஏக்கருக்கு ஒரு சென்ட் மேட்டுப்பாத்தி நாற்றங்கால் அமைத்து நாற்று விட்ட 12 முதல் 15 நாட்களுக்குள் 22.5 செ.மீ., க்கு 22.5 செ.மீ. என்ற இடைவெளியில் மார்க்கர் கருவி கொண்டு அடையாளமிட்டு அல்லது கயிறு பிடித்து நடவு செய்யவேண்டும்.

நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40 வது நாளில் கோனோவீடர் களை எடுக்கும் கருவியை கொண்டு களையை வயலிலேயே அமுக்கி விடவேண்டும். இதனால் களைகள் மக்கி பயிருக்கு உரமாக மாற்றப்படுகிறது. இதன் மூலம மண்ணில் அங்ககப் பொருளின் அளவு அதிகரிக்கின்றது.

மேலும் மண்ணில் அதிக காற்றோட்டம் ஏற்படுகிறது. செம்மை நெல் சாகுபடி முறையில் நல்ல காற்றோட்டம் ஏற்படுகிறது. இதோடு நல்ல சூரிய வெளிச்சமும் கிடைப்பதால் அதிக சிம்புகள் வெடிக்க ஏதுவாகிறது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் குறைவாக இருக்கும்.

சாதாரண நடவில் பத்து முதல் பதினைந்து சிம்புகள் உருவாகும். ஆனால் செம்மை நெல் சாகுபடியில் 60 முதல் 70 கதிர் பிடிக்கும் சிம்புகள் உருவாகும்.

இதனால் மகசூல் சாதாரண முறையைவிட ஏக்கருக்கு 500 முதல் 1000 கிலோ வரை கூடுதலாக மகசூல் கிடைக்கும். அதாவது ஏக்கருக்கு 16 முதல் 18 பொதிவரை மகசூல் கிடைக்கும் எ‌ன்றவேளாண்மை உதவி இயக்குனர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Wednesday, September 23, 2009

System of Rice Intensification (SRI) and Zero Budget Natural Farming



System of Rice Intensification was first introduced by Madagascar in the African continent. Due to its resounding success, it started spreading to other rice growing areas and has successfully transformed the rice cultivation techniques and practices. This has lead to significantly higher yield despite the decrease in input costs when compared to the traditional methods of cultivation that have been in practice in India. In the SRI technique you can avoid inorganic chemical application as fertilizer completely.

All the techniques of SRI are not new to the Indian rice farmers. Only some of them are significantly different from traditional methods. Normally, the Indian farmer is known to plant a bunch of 4 to 5 saplings together and the normal age of his sapling will be over 25 days whereas under SRI you only plant a single saplings and the age of the saplings is between 7 and 15 days, the younger the better.

The seed requirement under SRI is rather small when compared to the traditional methods that the Indian farmers have been adopting. In the traditional method we need about 25 to 30 kgs of seeds per acre where as in the SRI method we need only 600 grams of seeds for a spacing of 50 cm by 50 cm. You need 1 kilo of seeds for 40cm by 40 cm spacing. You need 1.3 kgs of seeds for 33cm by 33cm spacing. You would need 2.6 kilos of seeds for 25 cm by 25 cm spacing. You can follow any spacing convenient to you.

What are the fundamental rules of SRI method of cultivation?

1. The saplings for transplantation have to be very tender and young. Best is to use the sapling between 7 to 15 days of age. The younger the better;
2. Only single plant has to be transplanted;
3. Gap between rows and plants have to be larger than traditional method (minimum recommendation if 22cm x 22cm;
4. Shallow transplantation of saplings should be followed;
5. Before every water the field should be allowed to dry sufficiently to the extent that the land shows up hairline cracks;
6. Use of mechanical or manual weed removers to remove the weeds and integrate the weeds in the soil.

What are the benefits?

1. There is no external inputs from any distributor;
2. Excellent and multiple growth of shoots;
3. Deep and broad root base for the plants;
4. Minimum seed cost;
5. Area for seedbed much smaller and requirement of seeds also small;
6. Much lower water requirement;
7. Increase in microbial activity in the soil due to excellent aeration areation;


Why do you need young and tender plants?

In order to fully utilize the capacity of multiple shooting tendency of the paddy plant, it is recommended to transplant the 7 to 15 day old plants from the seed bed to field. Normally, a paddy plants gives its first shoot within ten days of transplantation. When adequate spacing is given for aeration, the mother plant give the first shoot in about ten days from transplantation, the mother plant there after gives out a shoot every 5 to 7 days depending on the field, at the same time, every new shoots becomes a mother within ten days of her arrival and continues to provide a short every 5 to 7 days thereafter. This process continues on every shoot. Consequently, the single sapling planted by you multiplies into several plants within her life time and delivers higher yield to the farmer.



Why do you need higher space between plants?

It is not enough to have high shoots alone. Unless, the shoots receive adequate sunlight and air, the root base can not grow adequately. Only when the root base of the plants increases significantly, the plants tend to be healthier and begin to deliver higher yield. With greater spacing there is increased air circulation which in turn reduces pest attack.

Why do we need to practice shallow planting?

Shallow planting will ensure aeration to the root zone. This will spur the shooting activity in the plant. Hence, it is recommended to plant the sapling within 1 to 2 cm deep and not more.

Why do we need to dry the field before every watering?

This needs to be done to increase the aeration in the root zone of the paddy plant to spur greater activity. However, once we enter the stage of maturity, we should not drain the water completely but we need to ensure a thin layer of water in the field continuously.

If we drain the field regularly then would it not increase the growth of weeds?

Yes, there will be an amount of weed growth. But remember, weeds are wealth. Integrate the weed plants in the soil and convert them into food for the plant at regular intervals. For this use mechanical weed removers regularly starting 10 th day of transplantation for four times. The gap between every weeding operation is to be about 12 days. What is most important in this operation is not only integrating the weeds into the fields by ploughing them back and but also increasing the aeration of the soil.

Where can we integrate the Palekar’s Zero Budget Natural farming in the SRI method and reap greater benefits?

To begin with, while preparing the field, apply 400 litres per acre of Jivamirtha on final ploughing. This will the food for the microorganisms in the field and will stimulate the growth of micro organisms in the field. You would have already mulched the soil sufficiently in a convenient method chosen by you. The micro organisms in the mulched ingredients will multiply rapidly and assist in mobilizing the food for the plants. When the saplings are in the seed bed, spray 5% solutions of Jivamurtha every alternative day from the fourth day till you collect the saplings for transplantation. Collect the sapling bed and keep the root zone are in a solution of Bijamurtha for 30 minutes and then start the transplantation.

Once you have completed the transplantation, apply Jivamurtha 200 litres per acre once in two weeks. Begin foliar application of 5% solution of Jivamurtha on the 21st day of transplantation. Thereafter once in every fifteen days till entering the stage of maturity continue the foliar application of 7 to 10% solution of the Jivamurtha. On entering the stage of maturity spray 5% solution of sour butter milk or 5% solution of coconut water (not tender coconut, use only mature coconut water) or 5% solution of Dhanya Kura arka. This will ensure preventing of shedding of grains and help in increasing the number of grains as well as the weight per grain. The SRI plants will be strong enough to resist any infestation. However, if you face infestation due to certain peculiar local conditions (like being surrounded with fields cultivating paddy in inorganic method), you may apply neemastra and it should help in controlling the pest attack. Please apply neemastra only if there is an attack of pests. No point in doing it before any attack takes place. If you find heavy attack of pests, you may use the Brahmastra. Normally, you will not have to resort to this as the plants raised in this method would be strong enough to resist pests.

Tuesday, September 22, 2009

A cost comparison between Inorganic cultivation of paddy and Zero Budget

Inorganic Cultivation Costs for a shortduration crop (ADT 37):-

Preparation of seed beds Rs. 400/-
Cost of 30 kgs of seeds @ Rs.25/kg Rs. 750/-
Field preparation (Ploughing twice) Rs. 1,800/-
Cleaning of border + Levelling of field Rs. 400/-
Removing of saplings from seedbed & distribution of bunches Rs. 790/-
Transplantation with 18 lady workers per acre Rs. 1,080/-
Basel dosage of fertiliser Rs. 750/-
First top dressing of fertiliser Rs. 300/-
Deweeding with 10 lady labourers Rs. 600/-
Second top dressing of fertiliser Rs. 150/-
Application of pesticides & insecticides Rs. 800/-
Cost of harvesting per acre Rs. 1,100/-
Collection of hay Rs. 300/-
Total cost as per inorganic cultivation Rs. 9,120/-

(Normal yeild 27 to 30 bags of 72 kgs of paddy. However, the yeild tends to decrease over continued practice of inoraganic cultivation as the humus gets destroyed over a period of time due to excessive and continued usage of inorganic fertiliser and pesticides. This substantially reduces the microbial activity in the soil)


Zero Budget "SRI" Cost of short duration paddy (ADT 37)

Preparation of seedbed Rs. 60/-
Cost of seeds for seedbed @ 4kgs @ Rs.25/kg Rs. 100/-
Field preparation ploughing with 10 pairs of cow per acre Rs. 800/-
Cleaning the field borders (varappu adnaivettal & levelling Rs. 400/-
Removing & Transplantation of saplings 12 ladies per acre Rs. 720/-
Cost of Bijamurtham & Jeevamurtham for whole period Rs. 500/-
Spraying of Jeevamurtham every 15 days @ 10 tanks per acre Rs. 400/-
Spraying of Agniastra & Brahmastra (if required only) Rs. 160/-
Deweeding 4 times with Konoweeder or rotory weeder 5x4 ladies Rs. 1,200/-
Harvesting @ 1,100 per acre Rs. 1,100/-
Collection of hay Rs. 300/-
Total expenses per acre on Zero budget natural farming Rs. 5,740/-

(On change over, the first time estimated yeild is 23 to 25 bags of 72 kgs. Guarantee of increased yeild on continued practice this method. I know of successful farmers have achieved yeild of over 40 bags of 72 kgs in this method).

Ponni variety of paddy for harvest

Shri Annadurai hails for a humble village of Umayalpuram in Musuri Taluk, Tiruchy District. He hails from a traditional farming family and regularly cultivates his paddy field of about ten acres. Of course, he is one of the few farmers who is privileged to have a well irrigated land round the year as he has his own water supply from well maintained wells.

He has been independently farming for more than three decades. He has all along been cultivating the farm following the inorganic route advised by Agricultural Universities, Government Agriculture Department and distributors of fertilizers and insecticides ever since the green revolution. All he achieved was to line the pockets of distributors of seeds, fertilizers, pesticides and could save very little for himself due to the high input costs and declining yeild.

In September, 07 he came across a line of hope in a message (was carried in the Tamil Agricultural fortnightly PASUMAI VIKATAN) which explained the concept of Zero Budget Natural Farming. The magazine had announced a conference to educate the farmers of Tamil Nadu on the Zero Budget Natural Farming propounded by Shri Subash Palekar. He enrolled for the conference and at the conclusion of the conference vowed to practice Naturalfarming following the technique of Shri Subash Palekar.

He went back to his village and began preparing two acres for paddy cultivation following Shri Subash Palekar method.

On preparing the land he applied 200 litres per acre of Jeevamirutham in his land and transplanted 25 to 28 day old “Ponni” paddy saplings in the traditional method planting. He successfully followed the application of Jeevamurutham, neem astra, Agni astra and hormone treatment. The schedule he followed is given below for the benefit of paddy farming community:-

1. The normal age of “Ponni” variety of paddy for harvest as per Shri Annadurai is 140 days.
2. His Saplings on transplantation was about 28 days old. He pumped in 200 litres per acre of jeevamurtha along with water before transplantation ;
3. His first spray was 5 litres of Jeevamurtha mixed with 100 litres of water on the 33rd day; (28+5)
4. He pumped in 200 litres per acre of jeevamurtha for the second time on 43rd day (i.e. 28 + 15 days);
5. He had a second spray of 10 litres of Jeevamurtha mixed in 150 litres of water per acre on the 48th day;
6. He pumped in 200 litres per acre of Jeevamurtha for the third time on the 58th day (ie.43+15 days);
7. He sprayed Neem Astra on the 63rd day though there was no indication of any pests as a proactive measure (Palekar recommends spraying only if there is any incidence of pests in the field. When there is no incidence of pest he says there is no need to spray any herbal pesticide at all);
8. around 85 to 90th day he found some incidence of “Kadhir Naval Poochi” (Ear head peg) and “Elai Puzhu” (cut worms) and hence he applied on the 95th day Agni Astra; This controlled the infestation completely;
9. Paddy started maturing by 110th day when he applied 5 litres of sour buttermilk mixed with 100 litres of water per acre as hormonal treatment to prevent shedding of grains and to increase the weight of the grain.
10. He harvested the grain around 145 days when he achieved 2100 kilos of paddy per acre with no inorganic input what so ever.

Monday, September 21, 2009

Boy Names - y

Yash .... victory, glory
Yashodhara .... one who has achieved fame
Yashodhan .... rich in fame
Yashwant .... one who has achieved glory
Yashpal .... protector of fame
Yatin .... ascetic
Yogesh .... god of Yoga
Yogendra .... god of Yoga
Yudhajit .... victor in war
Yuvaraj .... prince, heir apparent
Yudhisthir .... firm in battle
Yuyutsu .... eager to fight

Sunday, September 20, 2009

Boy Names - v

Vachaspati .... lord of speech
Vaninath .... Husband of Saraswati
Vaibhav .... richness
Vajramani .... diamond
Vallabh .... beloved, dear
Vandan .... salutation
Varun .... lord of the waters, neptune
Vasant .... VasanSpring (season)
Vasava .... Indra
Vasu .... wealth
Vasudev .... Krishna's father, god of wealth
Vasuman .... born of fire
Ved .... sacred knowledge
Veer .... brave
Vidur .... wise
Vidyacharan .... learned
Vidyadhar .... demi god
Vidyaranya .... forest of knowledge
Vijay .... victory
Vikas .... development, expanding
Vikram .... the sun of valour
Vikramendra .... king of prowess
Vikrant .... powerful
Vimal .... pure
Vinay .... good manners
Vinod .... happy, full of joy
Vipan .... sail, petty trade
Viplav .... drifting about, revolution
Vipul .... plenty
Viraj .... resplendent, splendour
Virochan .... moon, fire
Virat .... very big, giant proportioned
Vishal .... huge, broad, great
Vishnu .... Lord Vishnu, root, to pervade
Vishvajit .... one who conquers the universe
Vishvakarma .... architect of the universe
Vishva .... earth, universe
Vishwas .... faith, trust
Viswanath .... god of universe
Vishwamitra .... friend of the universe
Vishvatma .... universal soul
Vivek .... judgement
Vyomesh .... lord of the sky