Saturday, October 24, 2009

தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டம்
விவசாய வேலைகளற்ற காலங்களில் ஊரக மக்கள் இடம் பெயர்தலை தடுத்து அவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்களுக்கு, அதிக நுணுக்கமில்லாத திறமை தேவைப்படாத வேலைவாய்ப்பு அளிக்க இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குறைந்த பட்ச கூலியில் நீர் சேமிப்பு, நில மேம்பாடு, வறட்சியை எதிர்கொள்வற்கான முயற்சிகள் போன்ற திட்டங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

இத்திட்டத்தை பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் பிப்ரவரி 2, 2006 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
· வறுமைகோட்டிற்கு கீழ் வாழ்வோருக்கு மட்டுமல்லாமல் கிராமங்களில் வசிக்கும் அனைவருக்கும் நுணுக்கமில்லா வேலைவாய்ப்பு அளிப்பதற்கு, அனைவரையும் பதிவு செய்தல் வேண்டும்.
· விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்பட வேண்டும்.

· வேலை அட்டை வைத்திருப்போருக்கு வேலை தேவைப்படும் எனில் அவர்களது தேவையை ஏற்று வேலைவாய்ப்பை 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.

· நீர் மற்றும் நில வளம் காத்தல், காடுவளர்ப்பு, நீர் சேமிப்பு, நில மேம்பாடு போன்ற வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

· இதில் 50% வேலைவாய்ப்பை கிராம ஊராட்சிகளே அமல்படுத்த வேண்டும்.
· கிராமத் திட்டங்களை கிராமசபா பரிந்துரை செய்தபின் ஜில்லா பஞ்சாயத்து அதனை அங்கீகரிக்க வேண்டும்.
· தரகர்களையோ அல்லது இயந்திரங்களையோ பயன்படுத்தக்கூடாது.
· வேலையாட்கள் அதிகம் தேவைப்படுகின்ற பணிகளை தேர்ந்தெடுத்து, 60% கூலியில் வேலையை மேற்கொள்ள வேண்டும்.
· 15 நாட்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். மாநில அரசு வேளாண் பணிகளுக்கு பரிந்துரை செய்துள்ள குறைந்த பட்ச கூலியை கடைபிடிக்க வேண்டும்.
· தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கேரளா போன்ற மாநிலங்கள் பணப்பட்டுவாடா செய்வதற்கு வங்கிகளையும், தபால் நிலையங்களையும் பயன்படுத்துகின்றன.
மேலும் விபரங்களுக்கு http://www.nrega.nic.in/ என்ற இணையதளத்தை அணுகவும்।

இச்சட்டத்தின்படி யாரெல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்?
கிராமப்புறங்களில் வசிக்கும் வயது வந்த குடும்பத்தினர் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இச்சட்டத்தின் கீழ், ஏற்கனவே வேலையில் இருந்தாலும், அல்லது தற்பொழுது வேலை செய்துகொண்டிருந்தாலும், திறன் தேவைப்படாத வேலை கேட்க உரிமை உண்டு.
பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் இச்சட்டத்தின் கீழ் 33 சதவீத வேலையை பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.
தனியொருவரின் விண்ணப்பம் வேலைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா?
ஆம். வேலை வேண்டுவோர் குடும்பவாரியாக பதிவு செய்யப்படுவர். இருப்பினும், ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் 100 நாட்கள் வேலை வாய்ப்பிற்கு தங்களை பதிவு செய்யலாம்.
எவ்வாறு ஒருவர் விண்ணப்பிக்கமுடியும்?
வேலைக்கு தங்களை ஏற்கனவே பதிவு செய்து வேலை அட்டை வைத்திருப்போர், வேலை வாய்ப்பு பெற, வேலை வேண்டி ஒரு தனி கடிதம் வரைந்து கிராம பஞ்சாயத்திற்கோ அல்லது அவ்வொன்றியத்தின் திட்ட அலுவலருக்கோ அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேதியையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு வருடத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருவர் வேலைவாய்ப்பு பெறமுடியும்?
ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை பெறலாம். இந்த 100 நாட்கள் வேலையை ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வேலைக்காலம் தொடர்ச்சியாக 14 நாட்களாவது இருக்கவேண்டும். ஆனால் ஒரு வாரத்திற்கு 6 நாட்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்பொழுது ஒருவருக்கு வேலை கிடைக்கும்?
விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களுக்குள்ளோ அல்லது வேலை கேட்ட முதல் நாளில் இருந்தோ வேலை கொடுக்கப்படும்.
வேலையை யார் வழங்குவார்கள்?
கிராம பஞ்சாயத்து அல்லது திட்ட அலுவலர் இருவரில் எவரிடம் வேலை வேண்டப்பட்டதோ அவர் வாயிலாக வேலை வழங்கப்படும்.
ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என்பதை எவ்வாறு அவர்கள் அறியமுடியும்?
கிராமப் பஞ்சாயத்தோ அல்லது திட்ட அலுவலரோ, விண்ணப்பித்தவர்களுக்கு, எப்பொழுது, எங்கு வேலை அளிக்கப்படும் என்ற செய்தியை கடிதம் மூலம் அனுப்பவேண்டும். கிராம பஞ்சாயத்து மற்றும் திட்ட அலுவலர் அலுவலகங்களில் உள்ள செய்தி பலகையில் வேலை நடைபெறவிருக்கும் இடம், தேதி மற்றும் வேலைவாய்ப்பு பெறவிருப்போரின் பெயர்கள் போன்ற தகவல்கள் ஒட்டப்படும்.
வேலைக்கான கடிதம் கிடைத்தவுடன் விண்ணப்பித்தோர் என்ன செய்யவேண்டும்?
வேலை அட்டையுடன், வேலை நியமனம் செய்யப்பட்ட இடத்திற்கு, வேலை நடக்கவிருக்கும் நாளன்று செல்ல வேண்டும்.
ஒருவர் வேலை அளிக்கப்பட்ட தேதியில் வேலைக்குச் செல்லாவிட்டால் என்ன நடக்கும்?
கிராம பஞ்சாயத்து மற்று திட்ட அலுவலர் குறிப்பிட்ட 15 நாட்களுக்குள் அவர்கள் வேலைக்கு செல்லாவிட்டால், வேலையில்லாதோருக்கு அளிக்கப்படும் சலுகைகளில் இருந்து விலக்கப்படுவர்.
அவர்கள் மறுமுறை வேலைக்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஆம். விண்ணப்பிக்கலாம்
ஒருவருக்கு என்ன கூலி கிடைக்கும்?
மாநில அரசு வேளாண் தொழிலாளர்களுக்கு நியமனம் செய்துள்ள குறைந்த பட்ச கூலி அளிக்கப்படும்.
எவ்வாறு கூலி வழங்கப்படும்? தினக்கூலியா அல்லது வேலைப்பளுவை பொருத்தா?
இருவழிகளிலும் அளிக்கப்படும். வேலையின் அளவை மதிப்பிட்டு கூலி கொடுக்கப்பட்டால், 7 மணி நேரம் வேலை செய்வோருக்கு குறைந்த பட்ச கூலி கொடுக்க வேண்டும்.
எப்பொழுது கூலி வழங்கப்படும்?
வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது வேலை செய்த 14 நாட்களுக்குள்ளோ வழங்கப்பட வேண்டும். கூலிப்பணத்தில் ஒரு பகுதியை நாள் கூலியாகவும் வழங்கலாம்.
என்னென்ன வசதிகளை வேலையாட்களுக்கு அளிக்க வேண்டும்?
பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு நிழல், ஓய்வெடுப்பதற்கு இடம், முதலுதவி பெட்டி போன்ற வசதிகள் செய்துதரப்படவேண்டும். வேலை செய்யும்போது ஏற்படும் சிறு காயங்களுக்கான மருந்துகளையும், ஏனைய சுகாதாரத்திற்கான அவசர சிகிச்சைக்கான மருந்துகளையும் முதலுதவிப்பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.
வேலை எங்கு அளிக்கப்படும்?
வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டருக்குள் வேலை நடைபெறும். 5 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் இருந்தால் அவர்களுக்கு, போக்குவரத்திற்காக 10 சதவீதம் அதிகமாக பணம் வழங்கப்படும். மேலும், வயதானவர்களுக்கும், பெண்களுக்கும் கிராமத்திற்கு அருகிலேயே வேலை செய்வதற்கு முன்னுரிமை அளித்து வேலைகொடுக்கப்படும்.
வேலையாட்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் என்ன?
விபத்து ஏற்பட்டால்
வேலை செய்யும் போது ஏதாவது விபத்து நேர்ந்தால், அவர்களுக்கு மாநில அரசின் இலவச சிகிச்சை கிடைக்கும்.
காயம் அடைந்தவர் மருத்துவமனையில் இருந்தால்
காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தால், அவர்களுக்கு மருந்துகள், சிகிச்சை, தங்கும் வசதி போன்றவை இலவசமாக கொடுக்கப்படும். மேலும் 50 சதவீதம் கூலிக்கு குறையால் பணம் கொடுக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் விபத்தின் காரணமாக இறப்போ அல்லது நிரந்தர ஊனமோ ஏற்பட்டால் இறந்தவரின் வாரிசுக்கோ அல்லது ஊனம் ஏற்பட்டவருக்கோ, மத்திய அரசு குறிப்பிட்டபடி ரூ. 25,000 தொகை வழங்கப்படும்.
தகுதி பெற்றவர்களுக்கு வேலை அளிக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்?
வேலை வேண்டி விண்ணப்பித்த, வேலைக்கு தகுதியான ஒருவருக்கு 15 நாட்களுக்குள் வேலை கிடைக்காவிட்டால், அவருக்கு வேலைவாய்ப்பு இல்லாதோருக்கான சலுகைகள் வழங்கப்படவேண்டும்.
சலுகைகளின் வீதம்
ஒரு குடும்பத்தாருக்கு கொடுக்கப்பட்ட வேலைநாட்களில் முதல் 30 நாட்களுக்கு 25 சதவீதம் கூலியும், அதற்கு மேல் 50 சதவீதம் கூலியும் கொடுக்க வேண்டும்.
எந்த வகையான வேலைகளை கொடுக்க வேண்டும்?
நீண்டநாள் தாங்கும் நீடித்த சொத்துக்கள் ஏற்படுத்துதல்
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊரக ஏழை மக்களுக்காக நீடித்த நிலையான சொத்துக்களை உருவாக்கி அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதாகும்.
தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் வேலைகளுக்கு அனுமதி இல்லை
இத்திட்டத்தின் கீழ் செய்ய வேண்டிய வேலைகள் ஒன்றன்பின் ஒன்றாக
நீர்வள பாதுகாப்பு மற்று நீர் சேமிப்பு
வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல்
நீர்பாசன வாய்க்கால், நுண்பாசனம், சிறுபாசனம் போன்ற வேலைகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்கும், இந்திய அரசின் இந்திரா-அவாஸ் யோஜனா திட்டத்தின் சலுகை பெறுவோருக்கும், நீர்ப்பாசன வசதி அளித்தல்
ஏரிகளை தூர்எடுத்தல் போன்ற ஏனைய பழங்கால நீர் நிலைகளை புதுப்பிக்கும் வேலைகள்
நில மேம்பாடு
நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் வசதி அமைத்து வெள்ளத்தில் இருந்து பாதுகாத்தல்
அனைத்து தட்பவெப்ப நிலைகளிலும் கிராமங்களை இணைத்தல். சாலைகள் அமைத்து, தேவைப்படும் இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும், கிராமங்களின் உள்பகுதிகளிலும் தேவையான இடங்களில் சிறுபாலங்கள் அமைத்தல்
மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த மற்ற பணிகளும் இதனுள் அடங்கும்.

திட்டத்தில் பணியாற்றுவோரின் சேவைகள் எவ்வாறு கண்காணிக்கப்படும்?
உள் மற்றும் வெளி மதிப்பீட்டாளர்களைக் கொண்டு இத்திட்டத்தின் பொறுப்பாளர்கள் மேற்கொள்ளும் பணிகள், தொடர்ச்சியாகவும், இடையிலும் மதிப்பீடு செய்யப்படும். கிராம சபாக்கள் மூலம் பணிகள் அனைத்தும் கணக்கீடு செய்யப்படும். கிராம அளவில் காவல் கண்காணிப்பாளர்கள் அமைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் இதில் சம்பந்தப்பட்டோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ‘குறை தீர்க்கும் மையங்கள்’ உருவாக்கப்படும்

Friday, October 23, 2009

கோழி வகைகள்

மத்திய பறவை
ஆராய்ச்சி நிறுவன (CARI)-த்தின்

இனங்கள் நாட்டுக் கோழி வகைகள்

கரி-நிர்பீக் (ஏசெல் கலப்பு)




  • உண்மை அல்லது தூய்மை என்பதே “ஏசெல்” என்பதன் அர்த்தம் ஆகும்.
    இவ்வகை கோழிகள், சக்திவாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான
    நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. இதன் சண்டை போடும்
    திறனைக் கொண்டே ஏசெல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • இதன் தோற்றம் ஆந்திரப் பிரதேச மாநிலம் எனத் தெரிகிறது. இவ்வகை
    மிகவும் அரிதாகக் இருந்தாலும் சேவல் சண்டைக் காட்சி நடத்துபவர்களிடம்
    காணப்படுகிறது.
  • ஏசெல் இனம், திடகாத்திரமான, மதிப்பான பார்வை கொண்ட இனமாகும்.
  • சேவல் எடை 3-4 கிலோவாகவும், கோழி எடை 2-3 கிலோவாகவும் உள்ளது.
  • 196 நாட்களில் பருவம் அடைகிறது.
  • வருட முட்டை உற்பத்தி (எண்ணிக்கை) 92
  • 40வது வாரத்தில் முட்டை எடை (கிராம்) 50

கரி-சியாமா (கடகநாத் கலப்பு)




பொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள். கருப்பு சதையுடைய பறவை
என்பது இதன் அர்த்தம். மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார்
மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில மாவட்டமும்,
அதாவது 800 சதுர மைல் பரப்பு இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.

  • பழங்குடியினர், ஆதிவாசிகள், ஏழை கிராம மக்கள் ஆகியோர் இவ்வகைக்
    கோழிகளை வளர்க்கின்றனர்.
  • சேவல் பலிக்காக பயன்படுகிறது. அதாவது தீபாளிக்குப் பின்
    கடவுளுக்கு பலி கொடுக்கப்படுகிறது.
  • கோழிக் குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பிற்பகுதியில்
    கருப்பு கோடுகளுடன் காணப்படுகிறது.
  • கறி கருப்பாக, பார்வைக் ஏற்றதாக இல்லாமல் இருந்தாலும், சுவையாகவும்,
    மருத்துவ குணங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.
  • பழங்குடியினர், கோழி இரத்தத்தையும், கறியையும், கடும் நோய்களுக்கு
    மருந்தாக பயன்படுத்துகின்றனர்.
  • கறி மற்றும் முட்டையில் நல்ல புரதச் சத்தும் (25.47% கறியில்)
    இரும்புச் சத்தும் உள்ளது.
  • உடல் எடை 40 வாரத்தில் 920 கிராம்
  • பருவ வயது (நாட்கள்) - 180
  • வருட முட்டை உற்பத்தி எண்ணிக்கை - 105
  • முட்டை எடை 40 வாரத்தில் (கிராம்) - 49
  • கருவுற்றல் (%) - 55
  • கோழிக்குஞ்சு பொரிக்கும் திறன் - 52 %

ஹிட்கரி (நேக்கட் நெக் கலப்பு)


  • நீலமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும். பெயரில் உள்ளது போல்,
    பறவைகளின் கழுத்து வெறுமையாக உள்ளது. அல்லது, கழுத்தின்
    முற்பகுதியில் கொத்தாக சிறகுகள் உள்ளன.
  • பருவ நிலையை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு
    மாறிவிடுகிறது.
  • கேரளாவின், திருவனந்தபுரப் பகுதி இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.
  • 20 வாரத்தில் உடல் எடை 1005 கிராம்
  • பருவ வயது (நாட்கள்) - 201
  • 40 வாரத்தில் முட்டை எடை - 54 கிராம்
  • கருவுற்றல் (%) - 66
  • கோழிக்குஞ்சு பொறிக்கும் திறன் (%) - 71

யு.பி.-கரி (பிரிசில் கலப்பு)

Frizzle Cross.JPG


  • துப்புரவு குணமுடைய, உள்நாட்டு தோற்றமுடைய, நமது சுழலுக்கு ஏற்ற, நோய்
    எதிர்ப்பு திறன் கொண்ட, நல்ல வளர்ச்சியும், உற்பத்தி திறனும் கொண்ட
    இனமாகும்.
  • வீட்டிலியே வளர்ப்பதற்கு ஏற்ற இனமாகும்.
  • வெவ்வேறு வேளாண் காலநிலைக்கு ஏற்ற 4 இரகங்கள் உள்ளன.

    1. கடகநாத் - டெல்கம் ரெட் கலப்பு
    2. ஏசெல் - டெல்கம் ரெட் கலப்பு
    3. நேகட் நெக் - டெல்கம் ரெட் கலப்பு
    4. பிரிசில் - டெல்கம் ரெட் கலப்பு

குணாதிசயங்கள்

  • பருவ வயது : 170 - 180 நாட்கள்
  • வருட முட்டை உற்பத்தி 165-180 முட்டைகள்
  • முட்டை எடை - 52-55 கிராம்
  • முட்டை நிறம் : காப்பி நிறம்
  • முட்டை தரம் : உயர்ந்த தரம்
  • உயிர்த்திறன் : 95% மேல்
  • சுறுசுறுப்பானது, செடிகளை உண்ணும் குணமுடையது.
முட்டைக் கோழிகள்

கரிப்பிரியா முட்டைக் கோழி


  • 17-18 வாரம் முதல் முட்டையிட துவங்குகிறது.
  • 150 நாட்களில், 50% உற்பத்தியை அடைகிறது.
  • 26-28 வாரத்தில் அதிக பட்சம் உற்பத்தியாகிறது.
  • வளர்ப்பு கோழி மற்றும் முட்டைக் கோழியின் வாழ்வுத்திறன் 96% மற்றும்
    94%
  • அதிகபட்ச முட்டை உற்பத்தி (92%)
  • 72 வாரமான கோழி 270 முட்டைகளுக்கு மேல் இடுகிறது.
  • முட்டை அளவு - சராசரியான அளவு
  • முட்டை எடை - 54 கிராம்

கரி-சோனாலி முட்டைக் கோழி (கோல்டன்-92)





  • 18-19 வாரம் முதல் முட்டையிட துவங்குகிறது.
  • 155 நாட்களில் 50% உற்பத்தியை அடைகிறது.
  • 27-29 வாரத்தில், அதிகபட்ச உற்பத்தியாகிறது
  • வளர்ப்பு கோழி மற்றும் முட்டைக் கோழியின் வாழ்வுத் திறன் 96% மற்றும்
    94%.
  • அதிகபட்ச முட்டை உற்பத்தி - 90%
  • 72 வாரக் கோழி 265 முட்டைகளுக்கு மேல் இடுகிறது.
  • முட்டை அளவு : சராசரியான அளவு
  • முட்டை எடை 54 கிராம்
கரி- தேவேந்திரா
  • நடுத்தர வயதுடைய இருவகைப் பயனுடையது.
  • நல்ல உணவு மாற்றும் விகிதம் கொண்ட இனமாகும். உணவுச் செலவிற்கு
    மேல் அதிகமான வரவு கிடைக்கிறது.
  • மற்ற இனங்களை விட உயர்ந்தது. முட்டை பண்ணைகளில் குறைவான இறப்பு
    விகிதம்
  • 8வது வாரத்தில் உடல் எடை 1700 - 1800 கிராம்
  • பருவ வயது : 155 - 160 நாட்கள்
  • வருட முட்டை உற்பத்தி : 190 - 200

கறிக்கோழிகள்

கரிப்ரோ - விஷால் (கரிப்ரோ-91)





  • முதல் நாளில் கோழியின் எடை 43 கிராம்
  • 6வது வாரத்தில் எடை : 1650 - 1700 கிராம்
  • 7வது வாரத்தில் எடை : 2100 - 2200 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம் : 97-98%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 1.94 - 2.20

கரி-ரெயின்ப்ரோ (பி -77)


  • முதல் நாளில் கோழியின் எடை 41 கிராம்
  • 6வது வாரத்தில் எடை : 1300 கிராம்
  • 7வது வாரத்தில் எடை : 1600 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம் : 98-99%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 2.3

கரிப்ரோ - தன்ராஜா (பல நிறம் கொண்டவை)





  • முதல் நாளில் கோழியின் எடை 46 கிராம்
  • 6வது வாரத்தில் எடை : 1600 - 1650 கிராம்
  • 7வது வாரத்தில் எடை : 2000 - 2150 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம் : 97-98%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 1.90 - 2.10

கரிப்ரோ - மிருத்துஞ்சை (கரி நேகட் நெக்)




  • முதல் நாளில் கோழியின் எடை 42 கிராம்
  • 6வது வாரத்தில் எடை : 1650 - 1700 கிராம்
  • 7வது வாரத்தில் எடை : 2000 - 2150 கிராம்
  • கோழிகளின் உயிர்பு விகிதம் : 97-98%
  • 6வது வாரத்தில் உணவு மாற்று விகிதம் : 1.9 - 2.0
ஜப்பானியக் காடை



ஜப்பானியக் காடை கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் முட்டை மற்றும் கறிக்காக பல காடை பண்ணைகள்
உருவாகியுள்ளன. தரமான இறைச்சிக்கான விழிப்புணர்வே இதற்கு
காரணம்.

கீழ் கண்ட காரணிகள், காடை வளர்ப்பை பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப
ரீதியாகவும் எளிமையாக்கி உள்ளன

  • மிகக் குறைவான சந்ததி இடைவெளி
  • அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை
  • தடுப்பூசி தேவையில்லை
  • குறைவான இடவசதி இருந்தால் போதுமானதாகும்
  • கையாளுவற்கு எளிமை
  • குறுகிய காலத்தில் பருவமடைதல்
  • அதிக அளவில் முட்டையிடும் திறன் - பெண் காடைகள் 42 நாட்களில்
    முட்டையிட துவங்குகின்றன

ரி-த்தம்

  • மொத்த முட்டை பொரிப்புத்திறன் : 60 - 76%
  • 4 வார எடை : 150 கிராம்
  • 5 வார எடை : 170 - 190 கிராம்
  • 4 வாரத்தில் தீவனத்திறன் : 2.51
  • 5 வாரத்தில் தீனவ திறன் : 2.80
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 - 28 கிராம்

ரி-உஜாவால்

  • மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன்
    : 65%
  • 4 வார எடை : 140 கிராம்
  • 5 வார எடை : 170 - 175 கிராம்
  • 4 வாரத்தில் தீவனத்திறன் : 2.93
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 - 28 கிராம்

ரி-ஸ்வேதா

  • மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன் : 50-60 %
  • 4 வார எடை : 135 கிராம்
  • 5 வார எடை : 155-165 கிராம்
  • 4 வாரத்தில் தீவனத்திறன் : 2.85
  • 5 வாரத்தில் தீனவ திறன் : 2.90
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்

ரி-பியர்ல்

  • மொத்த முட்டைகளின் பொரிப்பு திறன் : 65 - 70 %
  • 4 வார எடை : 120 கிராம்
  • அன்றாடம் உட்கொள்ளும் தீவன அளவு : 25 கிராம்
  • 50% முட்டை உற்பத்தி வயது : 8 - 10 வாரம்

முட்டை உற்பத்தி : 285 - 295 முட்டைகள்

கினி கோழி



  • பெரிதும் நகர்ந்து செல்லக்கூடிய பறவைகள்
  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றது
  • காதம்பரி, சிதம்பரி மற்றும் ஸ்வேதாம்பரி என்ற 3 இரகங்கள் உள்ளன.

சிறப்பு குணங்கள்

  • கடினமாக பறவை
  • அனைத்து வேளாண்கால நிலைக்கும் ஏற்றது
  • குஞ்சுகளைத் தாக்கக்கூடிய அனைத்து வகை நோய்களுக்கும் எதிர்ப்புத்
    திறன் கொண்டவை
  • பெரிய செலவிலான பண்ணைக்கு அவசியமில்லை. நன்குமேயும் திறன்
    கொண்டவை
  • கோழித் தீவனத்திற்கு பயன்படாத அனைத்து வகையான தீவனங்களையும்
    கினிகோழிக்குப் பயன்படுத்தலாம்
  • பூசணம் மற்றும் அப்லோடாக்சின் நச்சை தாங்கவல்லது
  • கடினமான முட்டை ஓடு, முட்டை உடைவதைக் குறைப்பதோடு, நீண்ட நாள்
    வைத்துக் கொள்ளவும் உதவுகிறது
  • இறைச்சியில் அதிக அளவு வைட்டமின் சத்தும், குறைவான கொழுப்புச் சத்தும்
    உள்ளது.

உற்பத்தி பண்புகள்

  • 8 வாரத்தில் எடை : 500 - 500 கிராம்
  • 12 வாரத்தில் எடை : 900 - 1000
    கிராம்
  • முதல் முட்டையிடும் வயது : 230 - 250 நாட்கள்
  • சராசரி எடை : 38 - 40 கிராம்
  • முட்டை உற்பத்தி (ஒரு சுழற்சி மார்ச் - செப்டம்பர்) 100 - 120
    முட்டைகள்
  • கருவுற்றல் 70 - 75%
  • கருவுற்ற முட்டைகளின் பொரிப்புத் திறன் 70 - 80%
வான் கோழி
கரி-விரட்


  • அகன்ற மார்புடைய வெள்ளை வகை
  • 16 வாரத்தில், கோழிகள் 8 கிலோ எடையும், ஆண் வகைகள் 12 கிலோ எடையும்
    இருக்கும் பொழுது இறைச்சிக்காக விற்கப்படுகிறது.
  • உள்ளுர் சந்தையின் தேவைப்கேற்ப, குறுகிய வயதுடைய வான்கோழிகளை வெட்டி
    வறுப்பதற்கு பயன்படுத்தலாம்.

இனங்கள் பற்றிய விபரங்கள் தெரிய

இயக்குநர்

மத்திய பறவை ஆராய்ச்சி நிறுவனம்,

இசாட்நகர், உத்திரபிரதேசம்

பின்கோடு - 243122

மின்னஞ்சல் - cari_director@rediffmail.com

தொலைபேசி - 0581 - 23013220; 2301320; 2301320; 2303223;
2300204

தொலைநகல் :
91-581-2301321.


>ஐ.சி.ஏ.ஆர்.
கோழி ஆராய்ச்சித் திட்ட மையத்தின் இனங்கள்


வனராஜா





  • கிராமம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில், வீட்டுப் பண்ணைகளில்
    வளர்ப்பதற்கு ஏற்றது. ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி
    ஆராய்ச்சி திட்டம், இதனை வெளியிட்டுள்ளது.
  • பல வண்ணங்களில், கவர்ச்சியான இறகுகளைக் கொண்ட இது ஒரு பயனுள்ள
    பறவையாகும்.
  • அனைத்து வகையான நோய்களுக்கும் எதிர்ப்பு திறன் கொண்டதாகும்.
    வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.
  • வனராஜா ஆண் இனங்கள், முறையாக தீவன முறைதில் 8 வாரத்தில் நல்ல எடையை
    அடைகின்றன.
  • ஒரு பருவ சுழற்சியில், ஒரு கோழி 160-180 முட்டைகள் இடுகின்றது.
  • குறைவான எடையும், நீண்ட கால்களும் பெற்றிருப்பதால், இவை மற்ற இரைக்
    கொல்லிகளிடம் இருந்து தப்பி ஓடிவிடும். வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றவையாக
    உள்ளன.

கிரிஷிப்ரோ





  • ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி ஆராய்ச்சி திட்டம் இதனை
    உருவாக்கியுள்ளது.
  • பல வகை நிறங்கொண்ட கறிக் கோழியாகும்
  • 6 வாரத்தில் உடல் எடையை அடைகிறது. இதன் தீவன மாற்று விகிதம் 2.2
    ஆகும்
  • 97% கோழிகள் 6 வாரம் வரை உயிருடன் இருக்கின்றன
  • பறவைகள் கவர்ச்சியான இறகுகளுடன் உள்ளன. வெப்ப மண்டல
    பகுதிகளுக்கு ஏற்றதாகும்
  • வணிக ரீதியாக வளர்க்கப்படும் கிரிஷிப்ரோ ரகம் ராணிக்கெட் மற்றும் பிற
    தோற்று நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவை ஆகும்
  • நன்மைகள் : கடினமான, சூழலுக்கு ஏற்று வாழக்கூடிய,
    அதிக உயிர்வாழ் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

மேற்கண்ட இன கோழிகளைப் பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.

Director

Project Directorate on Poultry

Rajendra Nagar, Hyderabad - 500030

Andhra Pradesh,
INDIA
.

Phone :- 91-40-24017000/24015651

Fax : - 91-40-24017002

E-mail: pdpoult@ap.nic.in

Thursday, October 22, 2009

வேம்பு பூச்சி மருந்து

இந்தியாவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் ஒன்றான தபார் பல்கலைக் கழகம் (Thapar University) வர்த்தக ரீதியாக வேம்பு பூச்சி மருந்து தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது.

இந்த பல்கலைக் கழகத்தில் உள்ள தொழிலகத்திலேயே, வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.

இந்த பல்கலைக் கழகமும், பஞ்சாப் மாநில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப குழுவும் இணைந்து வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இங்கு முதலில் மணிக்கு 50 கிலோ வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நான்கு டன் வேம்பு பூச்சி மருந்து தயாரிக்கப்படும்.

இதற்கு தேவையான வேப்ப இலை, வேப்பங் கொட்டை ஆகியவைகளுக்கா வேப்ப மரம் வளர்க்கப்படும். இந்த வேப்ப மரங்கள் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தொழில் முனைவோர் பூங்காவில் வளர்க்கப்படும். இதிலிருந்து பூச்சி மருந்து தயாரிக்க தேவையான வேப்பங் கொட்டை பெறப்படும்.

இது குறித்து தபார் பல்கலைக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் அரிஜித் முகர்ஜி கூறுகையில், எங்களுக்கு இயற்கை பூச்சி மருந்துகளின் தேவை அதிக அளவு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை தயாரிக்க சிறிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது.


ரசாயண உரம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் செய்யும் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் இயற்கை உரம், பூச்சி மருந்துகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றது. எவ்வித தீங்கும் இல்லாதது.

இவ்வகை பூச்சி மருந்துகள் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் திறன் கொண்டது. இவை சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. நிலத்தடி நீர், மண் வளத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்று டாக்டர் அரிஜித் முகர்ஜி தெரிவித்தார்.

இதன் எதிர்கால திட்டம் பற்றி டாக்டர் அரிஜித் முக்ரஜி கூறுகையில், இந்த பூச்சி மருந்து தயாரிப்பதன் மூலம், இதை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பயன்படுத்த ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் பஞ்சாப்பில் சுற்றுச் சூழல் பாதிப்பு இல்லாத விவசாயம் மேற்கொள்ளப்படும்.

இந்த வருடம் ஜீலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் 22 டன் வேப்பங் கொட்டை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்த பூச்சி மருந்து தயாரிக்கப்பட்ட பிறகு, பல்கலைக் கழகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகளின் கூட்டம் நடத்தப்படும். இதில் பல்கலைக் கழக ஊழியர்கள், ரசாயண உரத்தை பயன்படுத்துவதால் நிலத்தடி நீர், மண் வளம், உணவு தானியங்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி விளக்குவார்கள்.

இவர்களுக்கு இயற்கை பூச்சி மருந்து பயன்படுத்த வேண்டிய முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு உண்டாக்குவார்கள். இதே போல் பல்கலைக் கழகத்திலும் விவசாயிகளின் கூட்டங்கள் நடத்தி விளக்கப்படும் என்று தெரிவித்தார்.

Wednesday, October 21, 2009

கதர் கிராமத்தொழில்கள்

மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையம் - கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம்
தகுதியுடைய திட்டங்கள்

இந்தத் திட்டம் கிராமப் புறங்களில் புதியதாக அமைக்க வாய்ப்புள்ள அனைத்து கிராமத்தொழில் திட்டங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.

தகுதியான தொழில்கள்

116 வகையான தொழில்கள் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் நடத்தக் கூடாத தொழில்கள் என்பதையும் (நெகடிவ் திட்டங்கள்) தனியாக கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கிக் கடனின் நிலையான முதலீட்டில் அதிக பட்சம் ஒவ்வொரு ரூ.50,000/- க்கும் குறைந்தது ஒரு நபருக்கு வேலை வாய்ப்பும் அளித்தல் வேண்டும்.


பல்வேறு வகையான கிராமத் தொழில்கள்

தாதுப் பொருள்கள் சார்புத் தொழில்கள் பற்றிய அட்டவணை

1. மண்பாண்டம் தயாரித்தல்

2. கிளிஞ்சல் மற்றும் சுண்ணாம்பு

3. கல்வெட்டுதல், ஜல்லி அரைத்தல், செதுக்குதல் (கட்டிடம் மற்றும் கோயிலுக்கு)

4. கல்லில் செய்யப்படும் பயன்பாட்டுப் பொருட்கள்

5. சிலேட்டு மற்றும் சிலேட்டுப் பென்சில் செய்தல்

6. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல்

7. பாத்திரம் கழுவும் பவுடர்

8. எரி பொருளாகப் பயன்படும் கரி

9, தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த செயற்கை கற்களால் செய்யப்படும் ஆபரணங்கள்

10. கோலப்பொடி

11. வளையல்

12. பெயிண்ட், வார்னிஷ், டிஸ்டம்பர் மற்றும் கலர் பொடிகள்

13. கண்ணாடிப் பொம்மைகள்

14. கண்ணாடி அலங்காரத் தொழில்

15. செயற்கை வைரம் கட்டிங்

வனம் சார்ந்த தொழில்கள்

16. தேனீ வளர்த்தல்

17. கத்தாழை வளர்த்தல்

18. பசை, பிசின் தயாரித்தல்

19. அரக்குத் தயாரித்தல்

20. மூங்கில் கூடை செய்தல்,

21. விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்

22. வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்

23. போட்டோ பிரேம்

24. நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்

25. இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்

26. வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்

கையால் செய்த காகிதம் மற்றும் நார்ப்பொருட்கள்

27. கைக்காகிதம்

28. காகிதத்தினால் செய்யப்படும் தட்டு, கிண்ணம் பை மற்றும் அட்டை பெட்டிகள்

29. புத்தக பைண்டிங் கவர், நோட்புக் செய்தல்

30. சணற் பொருட்கள் (நூல் தவிர)

31. கயிறு மற்றும் நார்பொருட்கள்

வேளாண் சார்ந்த உணவுப் பொருட்கள் / சார்புத் தொழில்கள்

32. அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் பதனிடுதல் / மசாலா பவுடர் / அப்பளம் / ரொட்டி பேக்கரி பொருட்கள் செய்தல்

33. இடியாப்பம்

34. சமையல் எண்ணெய் தயாரித்தல்

35. கோதுமை, ரவை தயாரித்தல்

36. சிறிய ரைஸ் மில்

37. பனை பொருட்கள் / பனை வெல்லம்

38. கரும்பு வெல்லம் / கண்டசாரி சர்க்கரை செய்தல்

39. மிட்டாய், தின்பண்டம் தயாரித்தல்

40. கரும்புச்சாறு செய்தல்

41. கேழ்வரகு, மக்காச்சோளப் பொருட்கள் தயாரித்தல்

42. முந்திரிப்பருப்பு தயாரித்தல்

43. பால்பொருட்கள் தயாரித்தல்

44. மாட்டுத் தீவனம் / கோழித் தீவனம் தயாரித்தல்

பாலிமர் மற்றும் ரசாயண சார்புத் தொழில்கள்

45. தீப்பெட்டி

46. அகர்பத்தி

47. பட்டாசு

48. தோல் பதனிடுதல்

49. சோப்பு தயாரித்தல்

50. ரப்பர் பொருட்கள்

51. ரெக்ஸின்

52. பி.வி.சி. பொருட்கள்

53. கொம்பு, எலும்பு, தந்தப் பொருட்கள்

54. மெழுகுவர்த்தி, சூடம் மற்றும் அரக்கு

55. பிளாஸ்டிக் பொருட்கள்

56. பொட்டு தயாரித்தல்

57. மருதாணி தயாரித்தல்

58. வாசனைத் தைலம் தயாரித்தல்

59. ஷாம்பு தயாரித்தல்

60. ஹேர் ஆயில்

61. டிடர்ஜெண்ட், சலவை பவுடர்

பொறியியல் மற்றும் மரபு சாரா எரிசக்தி

62. தச்சுவேலை

63. இரும்பு வேலை

64. அலுமினியப் பாத்திரங்கள்

65. சாண எரிவாயு

66. கழிவுப் பொருட்கள் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்தல்

67. பேப்பர் பின், ஸ்டவ் பின், ஊக்கு, கிளிப்புகள் தயாரித்தல்

68. அலங்கார பல்புகள், கண்ணாடிக்குடுவைகள் மற்றும் கண்ணாடி

69. குடை தயாரித்தல்

70. சூரிய ஒளி மற்றும் காற்றினால் இயங்கும் கருவிகள்

71. பித்தளைப் பாத்திரங்கள்

74. பாத்திரம் இல்லாத பித்தளை, செம்பு, வெண்கலப் பொருட்கள்

75. ரேடியோ

76. கேஸட் பிளேயர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்

77. வோல்டேஜ் ஸ்டெபிலைசர்

78. எலக்ட்ரானிக் கடிகாரம் மற்றும் அலாரம் கடிகாரம்

79. கேஸட் ரெக்கார்டர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்

80. மரத்தினால் செய்யப்படும் அழகுப் பொருட்கள்

81. தகரப் பொருட்கள்

82. வயர் நெட்

83. இரும்பு கிரில்

84. மோட்டார் வைண்டிங்

85. வண்டி, மாட்டு வண்டி, சிறிய படகுகள் தயாரித்தல், சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் அசெம்பிளிங்

86. இசைக்கருவிகள் தயாரித்தல்

ஜவுளி தொழில் (கதர் நீங்கலாக) மற்றும் பிற தொழில்கள்

87. பாலிவஸ்திரா

88. லோக்வஸ்திரா

89. பனியன்

90. ரெடிமேட் துணிகள் தயாரித்தல் / டெய்லரிங்

91. பொம்மை தயாரித்தல்

92. சாயம் / சாய அச்சுத் தொழில்

93. கம்பளி மற்றும் நூல்கண்டுகள்

94. எம்பிராய்டரி

95. மருத்துவத் துறைக்கானபேண்டேஜ்கள்

96. ஸ்டவ் திரிகள்

97. எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள்

98. லாண்டரி / சலவையகம்

99. பார்பர் / முடித்திருத்தகம்

100. பிளம்பிங்

101. வீட்டில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதுபார்த்தல்

102. டயர் வல்கனை சிங்

103. பம்ப்செட், டீசல் எஞ்சின் பழுதுபார்த்தல்

104. விவசாயப் பொருட்களுக்கான ஸ்பிரேயர், பூச்சி மருந்து பம்ப்செட்டுகள் பழுதுபார்த்தல்

105. ஒலி, ஒளி அமைப்புகளுக்கான ஒலி பெருக்கி, ஆம்பிளிபையர், மைக் போன்றவை வாடகைக்கு விடுதல்

106. பேட்டரி சார்ஜ் செய்தல்

107. பேனர் / கலைத்தட்டிகள் வரைதல்

108. சைக்கிள் ரிப்பேர் கடை

109. கட்டிட வேலைகள்

110 பேண்ட் வாசிக்கும் குரூப்கள்

111. மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் (பைபர் கிளாஸ்)

112. வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்

113. இசைக்கருவிகள்

114 உணவகம் (மதுபானம் நீங்கலாக)

115. தேனீர் விடுதி

116. அயோடின் கலந்த உப்பு

Monday, October 19, 2009

நிலக்கடலை சாகுபடி.. கூடுதல் மகசூல்

நிலக்கடலை - கூடுதல் மகசூல்….

நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற நுண்சத்துக் கரைசலை தெளிக்குமாறு வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.

தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிர் 25 நாள் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது. இந்தத் தருணத்தில் ஊட்டச் சத்து உரக் கரைசல் தெளிப்பது மிகவும் அவசியம்.

இதற்கு டிஏபி 1 கிலோ, அம்மோனியம் சல்பேட் 400 கிராம், பொட்டாஷ் 1 கிலோ, போராக்ஸ் 200 கிராம், தண்ணீர் 200 லிட்டர் தேவை.

முதல் நாள் மாலை 1 கிலோ டிஏபி உரத்தை நன்கு தூள் செய்து, அதை 10 லிட்டர் நீரில் ஊறவைத்து, மறுநாள் வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய கரைசலுடன் அம்மோனியம் சல்பேட் 400 கிராம், போராக்ஸ் 200 கிராம், பொட்டாஷ் 1 கிலோ ஆகியவற்றை கலந்து 1 டேங்குக்கு அரை லிட்டர் வீதம் 20 கலவை தயாரித்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

இதேபோல, விதைத்த 25 மற்றும் 40-வது நாள் என 2 முறை தெளிக்க வேண்டும்.

பின்னர், பயிர் வளர்ச்சி ஊக்கி மருந்தான பிளானோபிக்ஸ் 175 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து 1 ஏக்கர் பரப்பில் கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

இந்த முறைகளைக் கையாண்டால் பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு, விழுதுகள் அதிகம் உருவாகி, திரட்சியான மணிகள் கிடைக்கும். இதனால் 25 விழுக்காடு கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் வை. கலியபெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் .

மக்கிய தொழு உரம் தயாரித்தல்

தொழு உரம் தயாரிக்க 15 அடி நீளம், 8 அடி அகலம், 3 அடி ஆழம் என்ற அளவில் குழி வெட்ட வேண்டும்.

குழியில் அடுக்கடுக்காக சாணக்குப்பையை போட வேண்டும்.

முதல் அடுக்கில் முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை போடவேண்டும். அன்றாடம் சேரும் சாணக்குப்பையை கொஞ்சம் கொஞ்சமாக இந்த குழியில் சேகரித்து வரலாம்.

முக்கால் அடி உயரத்திற்கு சாணக்குப்பையை வந்ததும், அதன் மேல் கால் அடி அளவு மண் போட்டு நிரப்ப வேண்டும்.

மண்ண போட்டு முடித்ததும், இரண்டாவ அடுக்கு ஆரம்பிக்க வேண்டும்.

இரண்டாவ அடுக்கில் முக்கால் அடி சாணக்குப்பையை போட்டு அதன் மேல் கால் அடி அளவு மண் போடவேண்டும்.
இரண்டாவ அடுக்க அமத்த பிறகு குழியில்மீதம் ஒரு அடி இருக்கும்.

இதில் மூன்றாவ அடுக்கு சாணக்குப்பையை போட்டு, கால் அடி மண் போடவேண்டும். குழி தரமட்டத்திற்கு நிரம்பிவிடும். குப்பை மக்க ஆரம்பித்தம் அடுக்குகள் இறங்கிவிடும். இதனால் பள்ளம் ஏற்படும். இத தடுக்க மேலும் தரமட்டத்திற்கு மேல் 1 அடி உயரம் மண் போடவேண்டும்.

மண் மேட்டின் மீது தண்ணீர் தெளித்து மெழுகிவிடவேண்டும். இது ஆறு மாதத்தில் நன்றாக மக்கிவிடும்.

வெட்டிப்பார்த்தால் கருகருவென மக்கிய தொழு உரம் காணப்படும்.

தொழு உரத்திலுள்ள சத்துகள் :

0.4-1.5 சதவிகிதம் தழைச்சத்து
0.3-0.9 சதவிகிதம் மணிச்சத்து
0.3௧.9 சதவிகிதம் சாம்பல் சத்து

Thursday, October 15, 2009

புதிய பயிர் ரகங்கள்

புதிய பயிர் ரகங்கள்: நெல்லில் புதிய ரகம்: தற்போது வேளாண் ஆராய்ச்சிகள் வாயிலாக PMK (R) 4 என்ற புதிய ரகம் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக குறைந்தளவு நீர் பாசனம் உள்ள பகுதிகளுக்கு ஏற்ற இப்புதிய ரகம் சிவகங்கை மற்றும் ராமநாத புரம் விவசாய நிலங்களுக்கு ஏற்றது. குறுகிய கால வகையை சார்ந்த இப்புதிய ரகம் 100 முதல் 105 நாட்களில் அறுவடை செய்யலாம். முந்தைய PMK (R) 3 ரகத்தைக் காட்டிலும் வேளாண் ஆராய்ச்சிகளில் 14.7 சதவீதம் வரை அதிகளவு மகசூல் பெற்றுத் தந்துள்ளது. சராசரியாக ஒரு எக்டருக்கு 3700 கிலோ என்ற அளவில் நல்ல மகசூலை விவசாயிகள் குறைந்த மழை, நீர் வளம் உள்ள பகுதிகளில் பெறமுடியும்.

குதிரைவாலியில் புதிய ரகம் CO (KV) 2: சிறுதானிய பயிராகவும், தோட்டக்கால் மற்றும் மானாவாரி நிலங்களில் அதிகளவு பயிரிடப்படும் குதிரைவாலியில் CO (KV) 2 என்ற புதிய ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆடி (June July) மற்றும் புரட்டாசிப்பட்டம் (Sep. Oct.) மாதங்களில் பயிர் செய்ய ஏற்றது. சுமார் 95 நாட்களில் விளைச்சல் தரும். இந்தப் புதிய ரகம் முந்தைய நாட்டு ரகங்களைவிட 15-25 சதவீதம் வரை அதிக மகசூல் தருவதாக தொடர் வேளாண் ஆராய்ச்சிகள் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகளவு நல்ல கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தப்படும் இப்புதிய ரகம் நல்ல சுவை உள்ளதாகவும் 5871 கிலோ/ எக்டர் நிலத்தில் தீவனம் உருவாக்கும் தன்மைகொண்டது. சராசரியாக தானிய உற்பத்தியாக ஒரு எக்டர் நிலத்திற்கு 2114 கிலோ தரவல்லது.

புதிய ரக பருத்தி எஸ்.வி.பி. ஆர். (SVPR4): தற்போது உள்ள பருத்தி ரகங்களைவிட சிறப்பாக மானாவாரி நிலங்களில் நன்றாக வளரும் இப் புதிய ரக பருத்தி 150 நாட்கள் கால அளவை கொண்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கோடை காலங்களில் பயிரிட ஏற்றது. எக்டருக்கு சராசரியாக 1583 கிலோ வரை மகசூல் தரவல்லது. வீரிய ரக ஒட்டு ரகமாக இப்புதிய ரகம் MCU 5 மற்றும் S4727 ஆகிய ரகங்களின் இணைப்பு வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கரும்பு ரகம்: COC (SC) 24: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்ற ரகமான இப்புதிய ரகம் நன்றாக வறட்சி தாங்கி வளரக்கூடியது. 10 மாதங்களுக்குள் 133 டன்கள் ஒரு எக்டருக்கு மகசூல் தரவல்லது. சக்கரை அளவாக 17.05 டன் / எக்டருக்கு எடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்புதிய ரகம் CO 8371 மற்றும் MS 6847 போன்ற கரும்பு ரகங்களின் கலப்பு வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரக எள்: தற்போது TMV (SV) 7 என்ற புதிய ரக எள் வேளாண்மை ஆராய்ச்சிகள் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது. எல்லா காலத்திற்கும் பருவத்திற்கும் ஏற்ற இப்புதிய ரக எள் வேர்வாடல் நோயை தாங்கி வளரும் தன்மை கொண்டது. அதிகளவு புரதச்சத்து கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

புதிய கினியா ரக புல் CO (GG) 3: நீண்ட நாள் வளர்ந்து நன்றாக மகசூல் தரும் இப்புதிய ரக கினியா புல் CO (GG) 3 ஆப்ரிக்க நாட்டின் "மும்பாசா' என்ற ரகத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. தென்னை மற்றும் பிற தோட்டப் பயிர்களில் நல்ல ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். ஒரு எக்டர் நிலத்தில் வருடத்திற்கு 423 மெட்ரிக் டன்கள் வரை மகசூல் தரவல்லது.

தி.ராஜ்பிரவீன், விரிவுரையாளர், வேளாண்மை விரிவாக்கத்துறை, அண்ணாமலை பல்கலைக்கழகம்-608 002.

Saturday, October 10, 2009

எள் பயிர் அறுவடை தொழில்நுட்பம்

எள் எண்ணெய் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நல்ல தரமான எள் விதை உற்பத்தி செய்வது அவசியம். எள் விதைகளில் 51 முதல் 52 சதம் எண்ணெய்சத்து கிடைக்கிறது. தரமாக எள் உற்பத்தி செய்வதால், கூடுதல் விலை அதிக எண்ணெய் சத்து மற்றும் கசப்பு தன்மை அற்ற எண்ணெய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போது கருப்பு எள் ரூ.38 முதல் ரூ.42 வரையிலும், வெள்ளை எள் ரூ.58 முதல் ரூ.65 வரையில் சந்தையில் விலை போகிறது.

அறுவடைக்குப் பின் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைபிடித்தால், எள்ளில் கூடுதல் வருவாய் பெறலாம். எள் பயிர் அறுவடையின்போது செடியின் கீழ்பகுதியில் உள்ள இலைகளில் 25 சதம் இலைகள் உதிர்ந்தும் மேலே உள்ள இலைகள் மற்றும் தண்டு பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறி இருக்க வேண்டும். எள் காய்கள் பாதி அளவு மஞ்சள் நிறம் அடைந்துவிட்டால் பயிர் அறுவடை செய்ய ஏற்ற பருவமாகும்.

எள் பயிரின் கீழ் பகுதியில் இருந்து பத்தாவது காயை உடைத்துப் பார்த்தால் உள்ளே இருக்கும் விதைகள் கருப்பு நிறமாக மாறி இருந்தால், அறுவடை செய்துவிடலாம். இது கருப்பு எள் விதைக்கு மட்டும் பொருந்தும். வெள்ளை எள் பயிருக்கு எள் விதை வெள்ளை நிறம் அடைய வேண்டும்.

இந்த நிலை தாண்டி அறுவடை செய்தால் எள் காய்கள் வெடித்து, விதைகள் சிதறி சேதம் அடையும். எள் பயிரை தரைமட்டத்தில் அறுத்து எடுக்க வேண்டும். செடியின் மேல் பகுதியை உள்புறமும் அடிபாகமும், வெளிப்புறமும் இருக்கும்படி வைத்து வட்ட வடிவமாக திறந்த வெளியில் அடுக்கி வைக்க வேண்டும். அடுக்கிய எள் செடியில் உள்ள காய்கள் ஒட்டுமொத்தமாக முதிர்ச்சி அடைய மேல்பகுதியில் வைக்கோல் போட்டு மூடி வைக்க வேண்டும்.

மூன்று நாட்கள் கழிந்த எள் செடியை எடுத்து களத்தில் காயப்போட வேண்டும். மூன்று முதல் ஐந்து நாட்கள் காயவைத்து பின் விதையை தனியே பிரித்து எடுக்க வேண்டும். பிரித்து எடுக்கப்பட்ட எள் விதையில் கலந்துள்ள கல், மண், இலைச்சருகுகள், அழுகிய முதிராத விதைகள், பழுதுபட்ட விதைகளை தனியே பிரித்து எடுக்க வேண்டும்.

ஒரு லிட்டர் எள் விதையின் எடை 630 கிராம் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை முதல் தரமான எள்ளாக இருக்கும். காய்ந்த எள் விதையின் ஈரப்பதம் ஐந்துமுதல் ஒன்பது சதத்துக்குள் இருந்தால், தரமான எள் விதையாகும். எள் விதைகள் விற்பனை கூடங்களில் வணிகமுறை தரம் பிரிப்பு மூலம் மூன்று தரமாக பிரிக்கப்படுகிறது.

Friday, October 9, 2009

பருத்தி துல்லிய தொழில் நுட்ப சாகுபடி நுட்பங்கள்

மண் மற்றும் காலநிலை: நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் அதிகம் கொண்ட, மணல் களி கலந்த வண்டல் மண் அல்லது கரிசல் மண் கலந்த வண்டல்மண் ஏற்றது. கார அமிலத்தன்மை 5.5 - 6.0. வெப்பநிலை-25-30 டிகிரி செல்சியஸ்.

பருவம்: மே-ஜூன் முதல் அக்டோபர், டிசம்பர்- ஜனவரி முதல் மே.
விதையளவு: 2.5 கிலோ/எக்டர்.

விதைநேர்த்தி: டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் வீதம் சேர்த்து வைத்து கலக்கவும். அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றையும் 1 பாக்கெட் வீதம் கலந்து நிழலில் அரை மணி நேரம் வைக்க வேண்டும்.

இடைவெளி மற்றும் செடி எண்ணிக்கை: பொதுவாக ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி மற்றும் செடியின் எண்ணிக்கை மாறுபடும். வரிசைக்கு வரிசை 120 செ.மீ. செடிக்கு செடி 60 செ.மீ. இடைவெளியில் நடவேண்டும்.

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வழி உரமிடல்: தினமும் சொட்டுநீர் பாசன முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில், சொட்டு நீர் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத்தொட்டியின் மூலம் இடவேண்டும்.

பின்செய் நேர்த்தி: நடவு செய்த 30வது நாள் மற்றும் 60வது நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். பூ பிடித்தலை அதிகரிக்க என்ஏஏ 0.25 பிபிஎம் (பிளானோபிக்ஸ்) என்ற அளவில் பூ பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை: பருத்தி அறுவடை ரகங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும் பருத்தி வீரிய ஒட்டுரகம்.

பரிந்துரைக்கப்படும் அளவு: 120:60:60 கிலோ எக்டருக்கு
100 சத நீர்வழி பரிந்துரை: 200:37.50:250 கிலோ/ எக்டருக்கு
75 சதம் மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் மூலம் அடியுரமிட பரிந்துரை: 112.5 கிலோ x 6.25 = 703.13 கிலோ/ எக்டருக்கு.

தொடர்புக்கு: ஸ்ரீதர், போன்: 04342-232 049.

கே.சத்யபிரபா, 4/164, எஸ்.எஸ்.காலனி, உடுமலை.

Thursday, October 8, 2009

பொன்னாய் நெல் குவிக்க பொடி நெல் (நேரடி விதைப்பு) சாகுபடி

பெரியார், வைகை பாசன நிலங்களில் நிலைமை நாற்று விட்டு, நடவு செய்யும் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் அவ்வப்போது மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலை தற்போது பொடியில் நேரிடை விதைப்பு செய்து செய்யும் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது. இதை செய்துவிட்டு உடனே வாய்க்காலில் நீர் வந்தால் பாசனம் செய்து முளைத்த நாற்றினை தேவையான அளவு பறித்து விதை முளைக்காத சொட்டை இடங்களில் நட்டு, நடவுப்பயிர் போல் சாகுபடி செய்ய முடியும். அது சரிப்படவில்லை எனில் நேரிடை விதைப்பு முறையை கையாளலாம். இம்முறை சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் பெருவெட்டு நெல் அம்பாசமுத்திரம் 16, ஜோதி, டி.கே.எம்.9, குச்சி நெல் ஜே-13, ஆடுதுறை 45, ஐ.ஆர்.20, ஆடுதுறை 36 போன்றவைகள் ஆகும்.

எந்த ரகத்தின் விதை கிடைக்கின்றதோ அதை வாங்கி சாகுபடியை துவக்கலாம். விவசாயிகள் டிராக்டர் மற்றும் டில்லர் கருவி கொண்டு நிலத்தை புழுதியாக்க வேண்டும். புழுதியை ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பொடியென்று சொல்வார்கள். புழுதி வறட்சியாக இருக்கும் சமயத்தில் ஊட்டச் சத்துக்களை அதிகம் கொள்கின்றது. இதுசமயம் நன்கு மக்கிய இயற்கை உரத்தோடு பத்து பொட்டலங்கள் நுண்ணுயிர் உரத்தை நன்கு கலந்து நிலத்திற்கு இடலாம். இதுசமயம் ரசாயன உரங்களை இடாமல் நிலத்தில் ஊறப்போடாத நெல் விதையை நேரிடை விதைப்பு செய்து முளைக்க வைக்க நிலத்தில் பரம்படிக்க வேண்டும். இதுசமயம் நிச்சயம் ஆங்காங்கே மழை இருக்கும். விதை விதைத்த15ம் நாள் மேலுரமாக 25 கிலோ டி.ஏ.பி., 15 கிலோ யூரியா, 15 கிலோ பொட்டாஷ் இடவேண்டும். விதைத்த 20ம் நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும்.

விவசாயிகள் அரும்பாடுபட்டு பலமுறை நிலத்தை ஏற்கனவே உழுதிருப்பதால் களைப்பிரச்னை பெரிய அளவில் வராது. களையெடுத்து அதிக மழை வந்தால் 10 கிலோ யூரியா, 10 கிலோ பொட்டாஷ் இவைகளை இரண்டாவது மேலுரமாக இடலாம். புழுதிக்கால் சாகுபடியில் பூச்சி, பாதிப்பு அதிகம் இல்லையெனிலும் பூஞ்சாண வியாதிகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. அனேகமாக பயிரினை குலைநோய் தாக்கக்கூடும். இதனை உடனே கட்டுப் படுத்த வேண்டும். விவசாய அதிகாரிகள் நல்ல யோசனைகளை வழங்குவார்கள். சிபாரிசுபடி மருந்து அடிக்கலாம். பயிர் பூத்த 25 முதல் 30 நாட்களில் அறுவடை கட்டம் தோன்றும். அப்போது கதிரின் அடிபாகத்திலுள்ள 4, 5 மணிகள் பசுமையாக இருக்கும். ஆனால் இதர மணிகள் முற்றிய நிலையில் இருக்கும். இக்கட்டத்தை கண்டறிந்து நெல் அறுவடை செய்தால் சுமைகளை களத்து மேட்டிற்கு கொண்டுபோகும்போது நெல்மணிகள் கொட்டாது. இந்த கவனிப்பினால் விளைச்சல் திறன் அதிகரிக்கின்றது. இம்முறை சாகுபடிக்கு ஏக்கருக்கு செலவு ரூ.6,500/- வரை ஆகும். சீரிய முறையில் சாகுபடி பணிகளை செய்தால் பொடி நெல் சாகுபடியில் ஏக்கரில் 40 மூடை நெல் (மூடை 61 கிலோ) கிடைக்கும். 40 மூடை நெல்லின் மதிப்பு சுமார் ரூ.24,000/-. வைக்கோலின் மதிப்பு ரூ.500/-. மொத்தவரவு ரூ.24,500/-. ஏக்கரில் லாபம் ரூ.18,000/- வரை எடுக்க இயலும். மதுரை பகுதியில் கண்மாய் பகுதிகளிலும் நெல் சாகுபடி இதே பட்டத்தில் செய்யப்படுகின்றது. இச்சூழ்நிலையில் நெல் நாற்று விட்டு நடப்படுகின்றது. இதற்கு சாகுபடி செலவு ரூ.11,000/-. சாகுபடியில் மகசூல் ஏக்கரில் 40 மூடையும், ஏக்கரில் லாபம் ரூ.18,000ம் கிடைக்கின்றது.

Monday, October 5, 2009

நேரடி நெல் விதைப்பு - களை நிர்வாகம்

நேரடி நெல் சாகுபடியில் அதிக மகசூலுக்கு பெரும் சவாலாக இருப்பது களைகளின் எண்ணிக்கை, களைகளின் வகைகள் மற்றும் காலத்தைப் பொறுத்து களை விதையும் நெல் விதையும் சேர்ந்து ஒரே சமயத்தில் வளர்தல் போன்றவற்றால் நெற்பயிரின் விளைச்சல் 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விளைச்சல் பாதிப்பு இருக்கும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
நடவு வயலைப் போல் நேரடி நெல் விதைப்பில் நடவு நிலத்தை பண்படுத்தாமல் விதைகளை அப்படியே விதைப்பதாலும் களைகளின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படும். எனவே நேரடி நெல் விதைப்பில் அதிக மகசூலுக்கு விதைத்த 15 நாட்கள் முதல் 45 நாட்களுக்குள் களைகள் இன்றி பயிரைப் பராமரிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

களைகளை கட்டுப்படுத்தும் முறைகள்
உழவியல் முறைகள்: வயலில் உள்ள களை விதைகள் முளைக்கும் வகையில் தண்ணீரைத் தேக்கி வைத்து பின் கிராமாக்சோன் அல்லது கிளைபோசேட் 0.5 சதவீத மருந்தை (5 மிலி/ கி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்தல்) தெளிப்பதன் மூலம் வயலில் உள்ள பெரும் பாலான களை விதைகளை கட்டுப்படுத்தி விடலாம். பின் இரண்டு வாரம் கழித்து நெல் விதைகளை விதைப்பது சாலச்சிறந்தது.

ஊதா உரங்கள்: நேரடி நெல் விதைப்பில் ஏக்கருக்கு 10 கிலோ தக்கைப்பூண்டு அல்லது சணப்பை விதையை ஊடுபயிராக பயிரிட்டு செடி வளர்ந்த 30வது நாளில் ஏக்கருக்கு 500 கிராம் வீதம் 2, 4-டி சோடியம் உப்பை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து மக்கச் செய்யும் பொழுது சுமார் 40 சதவீத அகன்ற இலையுடைய களைகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி வயலில் அங்ககப் பொருட்களின் அளவு மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கின்றன.
ரசாயன முறை: விதைத்த 3 முதல் 8 நாட்களுக்குள் ஏக்கருக்கு பிரிட்டிலாகுளோர் அல்லது பென்டிமெத்தலின் 400 மில்லி வீதம் 25 கிலோவை மணலுடன் கலந்து வயலில் போதுமான ஈரப்பதம் இருக்கும்பொழுது தெளித்தால் கோரை வகைகளை எளிதாக கட்டுப்படுத்தலாம். மேலும் நெல்விதையின் முளைப்பகுதியில் களைக்கொல்லி படும்பொழுது சிறிது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே களைக்கொல்லியுட்ன பாதுகாப்பான் மருந்தை கலந்து பயன்படுத்துவது சிறந்த பயனை அளிக்கும். செடி வளர்ந்த 25வது நாளில் பினாக்சோ புரோப் பி ஈத்தைல் களைக்கொல்லியை ஏக்கருக்கு 20 கிராம் வீதம் தெளித்தும் புல் வகைகளை கட்டுப்படுத்தலாம்.
செய்யக்கூடாதவை: செடி வளர்ந்த பிறகு தெளிக்கும் களைக்கொல்லியை எக்காரணத்தைக் கொண்டும் மணலுடனோ, யூரியாவுடனோ அல்லது வயல் மண்ணுடனோ கலந்து தெளிக்கக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் 2, 4-டி சோடியம் உப்பு மற்றும் ஆல்மிக்ஸ்சுடன் பினாக்சோ புரோப் பி ஈத்தைல் மற்றும் சைக்ளோ பாப் பி பியூடைல் மருந்தை கலக்கக்கூடாது. மேற்கூறிய மருந்துகளுக்கு சேரும் தன்மை கிடையாது.
செய்யக்கூடியவை: வயலில் போதுமான ஈரம் இருக்கும்பொழுது மட்டுமே களைகள் முளைக்கும் முன்னும் பின்னும் அடிக்க வேண்டிய களைக்கொல்லியை பயன்படுத்துவது அவசியம்.

* களைச்செடி வளர்ந்த சரியான தருணத்தில் களைக்கொல்லியை அடித்தல் அவசியம்
* கோரை வகைகளுக்கு 2 முதல் 3 இலைகள் இருக்கும் தருணத்தில் களைக் கொல்லியை தெளிப்பது சிறந்த பயனளிக்கும்.
* தட்டை விசிறி வகை நாசில்களையே பயன்படுத்துதல் வேண்டும்.
பெ. கதிர்வேலன் மற்றும் சு.மீனாட்சிசுந்தரம்
வேளாண் அறிவியல் நிலையம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், குன்றக்குடி.

Sunday, October 4, 2009

கூஸ் (சீமை) வாத்து வளர்ப்பு

கூஸ் வாத்துகள் கறிக்காகவும், அழகுக்காகவும் புல் தரைகளை சமமாகப் பராமரிக்கவும், தோட்டங்களில் களைகளை அழிக்கவும் மற்றும் காவலுக் காகவும் வளர்க்கப்படுகின்றன. இதன் இரைப்பை பசுந் தீவனத்தை நன்கு ஜீரணித்து உட்கிரகிக்கும் திறன் படைத்தது. கூஸ் வாத்துக்கள் வளர்ப்பிற்கு போதுமான அளவு நீர் நிலைகளுடன் கூடிய மேய்ச்சல் நிலம் இருப்பது அவசியம். ஒரு ஏக்கர் நிலத்தில் பொதுவாக 15-50 கூஸ் வாத்துக்களை வளர்க்கலாம். அதிக குளிர், அதிக வெப்பம் மற்றும் அதிக காற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க அதிக செலவில்லாமல் கொட்டகை அமைக்க வேண்டும்.

இனப்பெருக்கம்: கூஸ் வாத்துக்களில் 6 இனங்கள் உள்ளன. அவை: டொலூஸ், எம்டன், சைனீஸ், கனேடியன், ஆப்ரிக்கன் மற்றும் எகிப்தியன் ஆகிய இனங்கள் உள்ளன. ஆண் கூஸ் வாத்துக்கள் சராசரியாக 7 கிலோ உடல் எடையும், பெண் கூஸ் வாத்துக்கள் 6 கிலோ உடல் எடையுடனும் இருக்கும். வாத்துக்களுடன் ஒப்பிடும்போது கூஸ் வாத்து முட்டைகளை நன்கு அடைகாத்து குஞ்சு பொரிக்கும் திறனுடையவை. ஆண் கூஸ் வாத்துக்களின் உடல் அமைப்பு பெண் கூஸ் வாத்துக்களைவிட பெரியதாக இருக்கும். பெண் கூஸ் வாத்து கத்தும்போது கரகரப்பான ஒலி உண்டாகும். ஆண் கூஸ் வாத்து கத்தும்போது மெல்லிய ஒலி உண்டாகும்.

தீவனப் பராமரிப்பு: கூஸ் வாத்துக்களின் முக்கிய உணவு புரதச்சத்து நிறைந்த பசுந் தீவனமாகும். ஒரு கூஸ் வாத்திற்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் தீவனம் - புல்வகை பசுந்தீவனம் 300 கிராம், அடர்தீவனம் 100 கிராம், கிளிஞ்சல் 5 கிராம், தீவனத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கலவை சேர்த்து அளிக்க வேண்டும். சாதாரணமாக கூஸ் வாத்துக் களுக்கு மேய்ச்சலுடன் வாத்து ஒன்றுக்கு, நாள் ஒன்றுக்கு 100 கிராம் அடர் தீவனம் அளித்தாலே போதுமானது. அடர்தீவனத்தை எப்போதும் தண்ணீரில் பிசைந்து கொடுக்க வேண்டும். பெண் கூஸ் வாத்துகள் அடைகாக்கும்பொழுது மேய்ச்சலுக்கு செல்லாததால் தினமும் கூஸ் வாத்துகளை அடையிலிருந்து கீழே இறக்கி பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்க வேண்டும்.

நோய் பராமரிப்பு: முக்கிய நோய் ராணிக் கெட். பாதிக்கப்பட்ட வாத்துக்களில் பச்சை மற்றும் வெள்ளை நிறக் கழிச்சல் காணப்பட்ட பின் இறந்துவிடும். பெண் வாத்துக்களின் முட்டை உற்பத்தி குறையும். இந்நோயினைத் தடுக்க 7, 21ம் நாட்களில் லசோர்ட்டா தடுப்பூசி போடவேண்டும். கூஸ் வாத்துக்களின் குஞ்சுகளில் முக்கியமாக வைட்டமின் மற்றும் தாது உப்புக்களின் பற்றாக்குறை நோய்கள் அதிகமாக காணப்படும். எனவே வாத்துக் குஞ்சுகளுக்கு தாது உப்புக்கலவை மற்றும் வைட்டமின்களால் செறிவூட்டப்பட்ட தீவனத்தினை அளிக்க வேண்டும்.

(தகவல்: மா.கீதா, க.செல்வராஜு, ச.சரவணன் மற்றும் அ.மாணிக்கவாசக தினகரன், கால்நடை நோய் நிகழ்வியல் நோய்தடுப்பு மருந்தியல் துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்-637 002).

Thursday, October 1, 2009

பிரச்னைக்குரிய நிலங்களுக்கு ஏற்ற மரவகைகள்

களர்நிலம்: சவுண்டல், கருவேல், வாகை, வேம்பு, புங்கம், சீமைக்கருவேல், வாகை.
உவர்நிலம்: சவுக்கு, சீமைக்கருவேல், புங்கம், இலவம், புளி, தைலமரம்
நீர் தேங்கிய சதுப்பு நிலம்: கருவேல், புங்கம், நாவல், நீர்மருது, மூங்கில்
மண் ஆழமில்லாத சரளை நிலம்: வேம்பு, அயிலை, வெள்வேல், சீமைக்கருவேல், ஓடை, புளி, வாகை.
பாறை நிலம்: புளி, வேம்பு, சீமைக்கருவேல், பரம்பை.
மணற்பாங்கான நிலங்கள்: சவுக்கு, சீமைக்கருவேல், வேம்பு, கொடுக்காப்புளி, பூவரசு, முந்திரி.
மண் அரிப்பு பகுதிகள்: சவுண்டல், வாகை, கிளைரிசிடியா, புங்கம், சீமை கருவேல், மந்தாரை, வாகை

Tuesday, September 29, 2009

இயற்கை முறையில் முட்டைக் கோசு சாகுபடி

இயற்கை முறையில் முட்டைக் கோசு சாகுபடி: நாற்றங்கால்: நிலத்தை நன்கு பண்படுத்தி ஒரு மீட்டர் அகலம், 15 செ.மீ. உயரம், தேவைக் கேற்ப நீளம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து 1 சதுர மீட்டருக்கு 2 கிலோ தொழு உரம் இடுவதற்கு முன்பு 200 கிராம் மண்புழு மட்கு உரம், 40 கிராம் மைக்கோரைசா வேர் <உட்பூசணம், 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போ பாக்டீரியா ஆகிய வற்றை கலந்து இடவேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண் டும். 40-45 நாட்களில் நாற்றுக்கள் தயாராகிவிடும். ஏக்கருக்கு விதை அளவு 150 கிராம்.

விதை நேர்த்தி: முட்டைக்கோசு விதைகளை 3 சதம் தசகவ்யா, 10 சதம் சாண மூலிகை உரம் மற்றும் 5 சதம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஆகியவற்றின் கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்து பின் நன்கு உலரவைத்து விதைக்க வேண்டும். நாற்றுக்களை பிடுங்கி நடுவதற்கு முன் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 5 சதம் கரைசலில் வேர்களை நன்கு நனைத்து நடவு வயலில் நடவேண்டும்.

நடவு வயல் தயாரிப்பு: நிலத்தை நன்கு பண்படுத்த வேண்டும். பின் ஏக்கரில் 12 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நன்கு கலக்க வேண்டும். மேலும் 75 கிராம் கொம்பு சாண உரத்தை 40 லிட்டர் தண்ணீரில் கரைத்து மண்ணில் தெளிக்க வேண்டும்.

உரமிடுதல்: ஏக்கருக்கு இயற்கை உயிராற்றல் மட்கு உரம் 2 டன், மண்புழு மக்கு உரம் 1 டன், வேப்பம் புண்ணாக்கு 200 கிலோ நிலம் தயாரிக்கும்போது இடவேண்டும். நடும்போது பார்களில் 2 கிலோ வீதம் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.

நடவு: வாளிப்பான நாற்றுகளை வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்கு செடி 40 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடும்பொழுது 1 ஏக்கருக்கு தேவையான நாற்றுக்களை 2 பொட்டலம் அசோஸ் பைரில்லம் மற்றும் 2 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியா நுண்ணுயிர் கலவையை 4 முதல் 6 லிட்டர் நீரில் கரைத்து நாற்றுக்களின் வேர்பாகத்தை 20 நிமிடம் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்.

நீர் பாய்ச்சுதல்: நடவு செய்த பின் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மழை இல்லாதிருப்பின் 2 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பயிர் பாதுகாப்பு: வெட்டுப்புழுக்கள்: கோடைகாலத்தில் விளக்கு பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழித்தும், தெளிப்பு நீர் பாசனம் மூலம் வயலுக்கு நீர் பாய்ச்சி புழுக்கள் தண்ணீரின் மேல் மிதக்கும்போது பறவைகள் அவற்றை எடுத்து உண்பதன் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

அசுவினி பூச்சியைக் கட்டுப்படுத்த நெட்டில் இலைச்சாறு 10 சதம் கரைசலை 45, 60 மற்றும் 75வது நாட்களில் இலைவழி தெளிக்க வேண்டும். வெள்ளைப்புழுக்கள், வெள்ளை ஈ ஆகியவற்றை விளக்குப்பொறி வைத்தும், புழுக்களை கையால் பொறுக்கியும், வெள்ளை ஈயை விளக்கெண்ணெய் தடவப்பட்ட மஞ்சள் நிற குடங்களை ஒட்டுப் பொறியாக்கிக் கொண்டு 4 முறை 1 வார இடைவெளியில் பிடிக்க வேண்டும்.

நோய்களைக் கட்டுப்படுத்த டிரைகோடெர்மா விரிடி மற்றும் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் ஏக்கருக்கு 1 கிலோ வீதம் இடுவதன் மூலம் வேர் அழுகல், வாடல், நூற்புழுக்கள், இலைப்புள்ளி மற்றும் கருகல்நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். (தகவல்: த.செல்வராஜ், க.வ.ராஜலிங்கம், சி.அனிதா, வணிக தோட்டக்கலை நிலையம், ஊட்டி-643 001. போன்: 0423-244 2170)

Monday, September 28, 2009

கறிக்கோழி வளர்ப்பு

கோழிக்கறி வகைகளில் அதிகம் விரும்பப்படுவது கறிக்கோறி (ப்ராய்லர்) வகையாகும். பல தனியார் நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து ஒப்பந்த முறையில் கறிக்கோழி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனையில் எந்தவித சிரமமும் இல்லை. மிருதுவான, மென்மையான சதையை உடைய 1.5-2.0 கிலோ எடையுள்ள 8 வார வயதிற்கு கீழ் உள்ள கோழிகளை ப்ராய்லர் என்கிறோம்.

சிறந்த பராமரிப்பு முறைகள்

கோழிக் கொட்டகையின் வெப்பநிலை: முதல் வாரத்தில் 950 சி இருக்க வேண்டும். பின்பு ஒவ்வொரு வாரமும் 50 சி வெப்பத்தை குறைக்க வேண்டும். 6-ஆவது வாரம் 700 சி வெப்பம் வரும் வரை குறைக்க வேண்டும்.

காற்றோட்ட வசதி : கோழிக் கழிவிலிருந்து வெளிப்படும் அமோனியாவை நீக்கி மூச்சுத்திணறல் வராமல் தடுக்க நல்ல காற்றோட்டத்தைப் பராமரிக்க வேண்டும்.

மின்விளக்கின் மூலம் வெப்பம் அளித்தல்: 200 சதுர அடி தரையளவிற்கு 60 வாட் விளக்குகள் போட வேண்டும்.

தரை இடஅளவு : ஒரு கோழிக்கு 1 சதுர அடி

மூக்கு வெட்டுதல்:1 நாள் வயதுடைய குஞ்சுகளுக்கு மூக்கை வெட்ட வேண்டும்.

கறிக்கோழி (ப்ராய்லர்) சுகாதாரப் பராமரிப்பு

· நோயற்ற குஞ்சுகளைக் கொண்டு தொடங்க வேண்டும்

· மேரக் நோயைத் தடுக்க குஞ்சு பொறிப்பகத்திலேயே தடுப்பூசி போடவேண்டும்.

· 4-5 நாட்களில் ஆர்.டி.வி.எப். 1 போட வேண்டும்.

· கழிச்சல் (காக்கிடியாசிஸ்) நோயினைத் தடுக்க தீவனத்துடன் மருந்துகளைக் கலந்து கொடுக்க வேண்டும்.

· பூஞ்சாண நச்சுகளிலிருந்து தீவனத்தைப் பாதுகாக்க வேண்டும்.

· தரையில் 3 இஞ்ச் ஆழத்திற்கு நிலக்கடலை கழிவு அல்லது நெல் உமி கொண்டு நிரப்ப வேண்டும்.

விற்பனை செய்தல்

· 6-8 வாரங்கள் வயதுடைய கோழிகளை விற்பனை செய்ய வேண்டும்.

· கோழிகளைப் பிடிக்கும் போது, காயங்கள் ஏற்படாமல் இருக்க, தீவனத் தட்டுகளையும், தண்ணீர் தட்டுகளையும் அகற்ற வேண்டும்.

· திடீர் வானிலை மாற்றங்களிலிருந்து கோழிகளைக் காக்க வேண்டும்.

சுகுணா (கோயமுத்தூர்), வெங்கடேஸ்வரா (பூனா), பயனியர், ப்ரோமார்க்போன்ற தனியார் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் விவசாயிகளுடன் இணைந்து கறிக்கோழி உற்பத்தி செய்கின்றன. மேலும்,

· சிறந்த இனங்கள் கிடைக்குமிடம்

· கோழிக் கொட்டகை அமைத்தல்

· தீவனம் அளித்தல்

· நல்ல வளமான கோழிகளை உருவாக்குதல்

போன்றவற்றில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள கால்நடை பராமரிப்பகத்தையோ அல்லது வேளாண் அலுவலகத்தையோ அணுகவும்.

Sunday, September 27, 2009

புதிய ரகம் கத்தரி,முந்திரி,ஆமணக்கு.

புதிய கத்தரி ரகம் - கோ.பி.எச்.2.: தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திற்கும் உகந்த இப்புதிய ரகம் 120-130 நாட்களில் மகசூல் தர வல்லது. மே - அக்டோபர் மற்றும் ஜனவரி முதல் ஜுன் மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்றது. உக65 மற்றும் ணீதண்ட தttச்ட் ஆகிய ரகங் களின் ஒட்டு ரக கலவையாக வேளாண் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரக முந்திரி -/ விஆர்ஐ (சிடபிள்யூ) எச்.1: தமிழகத்தின் முதல் ஒட்டு ரகமாக முந்திரி யில் உருவாக்கப் பட்டுள்ள இப்புதிய ரகம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிர் செய்ய உகந்தது. பெரிய முந்திரி பருப்பு மற்றும் கொட்டைகள் கொண்டதாகவும் எளிதாக உடைக்கும் வண்ணம் இப்புதிய ரகம் தொடர் வேளாண்மை ஆராய்ச்சிகள் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ரக ஆமணக்கு (ஒய்ஆர்சிஎச்.1): தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதிய ரகம் முந்தைய ரகத்தை காட்டிலும் 27 சதவீதம் அதிகளவு மகசூல் தரவல்லது. வீரிய ஒட்டு ரகமான இப்புதிய ரகம் குறைந்தளவு நீர்ப் பாசனம் மற்றும் மானாவாரி நிலங்களில் பயிர் செய்ய ஏற்றது. 150 முதல் 160 நாட்கள் வரை கால அளவை கொண்ட இப்புதிய ரகம் 1861 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் மகசூல் தரவல்லது. (தகவல் . டாக்டர் தி.ராஜ்பிரவீன், விரிவுரையாளர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 608002)

Saturday, September 26, 2009

மாவட்ட ஆட்சியரின் கேள்விகள் மற்றும் விவசாயிகளின் பதில்கள்

(1) உங்கள் கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு போதிய நீர் ஆதாரங்கள் இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா? இருக்கிறது எனில் என்ன நீர் ஆதாரங்கள்?
i) ஆறு
ii) ஏரி/குளம்
iii) கிணறு
iv) மழைநீர்
இல்லையெனில் எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இப்பொழுது இதை சரிபடுத்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சி என்ன? அரசிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மாவட்டத்தில் பெரும்பாலும் ஏரி, குளம், கிணறு மற்றும் மழைநீர் ஆகிய நீர் ஆதாரங்களைக் கொண்டே விவசாயம் செய்யப்படுகிறது. ஆறு மற்றும் குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரப்பட வேண்டும். மழைநீரைத் தேக்கிட வேண்டி கசிவு நீர்க்குட்டைகள் மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். விவசாயத்திற்கென உதவிட தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி துவக்கி செயல்படுத்தப்பட வேண்டும்.

(2) உங்களது நிலத்தில் வேளாண்மை செய்திட தேவையான அளவிற்கு மண்வளம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா? இல்லையெனில் என்ன காரணம் என்ன நினைக்கிறீர்கள்? அதை நிவர்த்தி செய்வதற்கு உங்களது முயற்சி என்ன? அரசிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

மண்வளம் உள்ளது. பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை ஈடுகட்ட கால்நடை எரு இடுவதற்கு கால்நடை வளர்ப்புத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். பசுந்தீவன விதைகளை துறை மூலமாக இலவசமாகவோ, மானியத்திலோ வழங்க வேண்டும். வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலமாக கிராமங்களில் மண் ஆய்வுக்கூடங்கள் அமைத்து, விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் முறைகள் குறித்த பயிற்சிகள் அளித்து, ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் முறைகளை செயல்படுத்த வேண்டும்

(3) உங்களுக்கு தரமான விதைகள் கிராமங்களில் தேவையான நேரத்தில் தேவையான அளவில் கிடைக்கிறதா? இல்லையெனில் அதை நிவர்த்தி செய்திட உங்களது முயற்சி என்ன? அரசிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பெரும்பாலும் விவசாயிகள் விருப்பப்படும் விதைகள் கிடைப்பதில்லை. எனவே தற்போதைய நிலையைவிட சிறப்பாக செயல்படுத்த, துறை மூலமாகவும், கிராமங்களில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் விவசாயிகளின் விருப்பத்திற்கும் அந்தந்தப் பகுதிகளுக்கும் தேவையான தரமான வீரிய இரக விதைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அதிலும் அந்தந்த கிராமங்களிலேயே, உரிய பருவகாலத்திற்குள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

(4) உங்களது கிராமத்தில் உங்களது பயிர்களுக்கு தேவையான உரம் தேவையான அளவில் கிடைக்கிறதா? இல்லையெனில் இதை நிவர்த்தி செய்வதற்கு உங்களது முயற்சி என்ன? சரிசெய்யப்படுவதற்கு அரசாங்கத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

தேவையான உரங்கள் தேவையான அளவில் கிடைப்பதில்லை. கிராமங்களில் கூட்டுறவு சங்கங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு சாகுபடி பரப்பிற்கேற்ப தேவையான உரங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை உரங்கள், பசுந்தாள் உங்கள் மற்றும் மண்புழு உர பயன்பாடு குறித்த வழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பதையும், தரமற்ற உரங்கள் விற்பதையும் தடுக்க வேண்டும்

(5) இயற்கை வேளாண்மை முறை உழவர்களுக்கு பொருளாதார ரீதியில் சரியான என கருதுகிறார்கள்? இல்லையெனில் இதை நிவர்த்தி செய்வதற்கான உங்களது முயற்சி என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

சரியான முறைதான். இதற்காக கறவைமாடுகள் மற்றும் கால்நடைகள் வாங்கிட கடனுதவி மற்றும் மானியங்கள் வழங்கப்பட வேண்டும். துறை அலுவலர்கள் மூலம் கிராமங்களில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் டான்வாப் சுய உதவிக்குழுக்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். பொதுமக்களுக்கு இயற்கை வேளாண் விளைபொட்கள் விஷமற்றது என்பதற்கும், நஞ்சு கலந்த மரபணுமாற்ற உணவுப் பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கானது என்பதை அரசு விளம்பரங்கள் மூலம் உணர்த்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மை விளைபொருட்களுக்கு நல்ல விளை கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

(6) உங்களது நிலங்களில் பயிர்செய்வதற்கு தேவையான அளவிற்கு கடன் வசதி செய்து கொடுக்கப்படுகிறதா? இல்லையெனில் உங்களது முயற்சி என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பெரும்பாலும் கடன் கிடைப்பதில்லை. அப்படியே கடன் கொடுத்தாலும், மிகக் குறைவான தொகை, பயிர் சாகுபடி சமயத்தில் கிடைக்காமல், காலதாமதமாகவே வழங்கப்படுகிறது. இப்பிரச்சினைகளை நிவிர்த்தி செய்து, கிராமங்களில், கூட்டுறவு சங்கங்களில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினர்களாக சேர்த்து, பழைய கடன்தாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவு கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

(7) விவசாயத்தொழிலாளர்கள் உங்கள் கிராமத்தில் பயிர் செய்திட தேவையான அளவில் கிடைக்கிறர்களா? இல்லையெனில் இதை நிவர்த்தி செய்வதற்கு உங்களது முயற்சி என்ன? அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. எனவே வேளாண்மைத்துறை மூலம் உழவு, பார் பிடித்தல் மற்றும் அறுவடை ஆகிய பணிகளுக்குத் தேவையான நவீன, தரமான இயந்திரங்களை அதிக மானியத்துடன் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கருவிகளை டான்வாப் சுயஉதவிக்குழுக்கள் மூலம் வழங்கி அந்தந்தப் பகுதிகளில் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் கிராமங்களில் உழவர் மன்றங்கள் அமைத்து, விவசாயிகளை ஒருங்கிணைத்து தேவைக்கேற்ப முன்னுரிமை வழங்கி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கலாம்.

(8) நீங்கள் உற்பத்தி செய்யக்கூடிய விளைபொருட்களுக்கு உரிய நியாயமான விலை உங்களது கிராமத்தில் கிடைக்கிறதா? இல்லையெனில் உங்களது முயற்சி என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

நியாயமான விலை கிடைப்பதில்லை. தானிய ஈட்டுக்கடன் வழங்க வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டியுள்ளதால் நியாயமான விலை கிடைப்பதில்லை. உள்ள10ர் வியாபாரிகள் கூட்டுசேர்ந்து கொண்டு, வெளியூர் வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாலும், நல்ல விலை கிடைப்பதில்லை. கூட்டுறவு சங்கங்கள் மூலம், உரிய விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை பொருட்களை சேமித்து வைக்க குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகள் அமைக்க வேண்டும். மரவள்ளிக்கு ஆலை அதிபர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கூடி பேச்சு வார்த்தை நடத்தி விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்

(9) விவசாயத்தினை கூடுதலாக லாபம் தரக்கூடிய ஒரு தொழிலாக மாற்றுவதற்கு என்ன முயற்சிகள் நீங்கள் எடுக்கிறீர்கள்? எதை எல்லாம் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கிறீர்கள்?

துல்லிய பண்ணைய திட்டத்தின் மூலமும், இயற்கை மற்றும் பசுந்தாள் உர பயன்பாடு குறித்தும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பு போன்ற தொழில்களை அரசாங்கம் கிராமங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டும். மின்வசதி, நீர்நிலைகள் ஆகியன ஏற்படுத்தி தரப்பட வேண்டும். விளைபொருட்களுக்கு நியாயமான நல்ல விலை நிர்ணயித்து ஊக்குவிக்க வேண்டும். விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற மண்வளம், உர நிர்வாகம், பூச்சி கொல்லி நிர்வாகத்தில் இயற்கை முறையை கடைபிடிக்க வழிவகை ஏற்படுத்த வேண்டும். 'ஓர் ஊர் ஓர் விவசாயம'; என அறிவிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மாதம் ஒருமுறை வயல்களை நேரிடையாக பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

(10) தமிழக அரசு அறிவித்து செயல்படும் துல்லிய பண்ணையம் திட்டத்தால் கூடுதலான விளைச்சல் பெறுவது பற்றி நீங்கள் அறிவீர்களா? அறிவீர்களேயானால் நீங்கள் கையாளுகிறீர்களா? இல்லையெனில் ஏன் செயல்படுத்தவில்லை?

ஆம், அறிந்துள்ளோம். பிற மாவட்டங்களில் உள்ள வசதிகள், மானியங்கள், நமது மாவட்டத்திற்கும் தேவை. வேளாண் கருவிகள், இயந்திரங்கள் ஒன்றியங்களில் வழங்கப்பட வேண்டும். செலவு அதிகமாக உள்ளதால், கூடுதல் மகசூல், கூடுதல் செலவு என சரியாகிவிடுகிறது. எனவே இதனை சிறு விவசாயிகள் நடைமுறைப்படுத்துவது கடினம். இதுகுறித்து துறை அதிகாரிகள் கிராமங்களில் முகாமிட்டு ஆலோசனைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

(11) செம்மை நெல் சாகுபடியால் பெறக்கூடிய கூடுதலான பலன்களை நீங்கள் அறிவீர்களா? அறிவீர்களேயானால் நீங்கள் அதனை கையாளுகிறீர்களா? இல்லையெனில் ஏன் கையாளவில்லை? இதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம், அறிவோம். சிறப்பாக உள்ளது. நேரடி நெல் விதைப்பு முறையையும் கையாண்டு நல்ல மகசூலை குறைவான செலவில் பெற்றோம். நல்ல பலன் கிடைக்கிறது. மேலும் கூடுதல் பலன்களை பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமங்களில் செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்க வேண்டும். வயல்களுக்கு சென்று ஆலோசனைகள் வழங்க வேண்டும். நீர் ஆதாரம் இல்லாத பகுதிகளில் இதனை செயல்படுத்த பாசன வசதி ஏற்படுத்த உதவ வேண்டும். மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும், விவசாயிகளை தேர்ந்தெடுத்து, அவர்களது பண்ணைகளிலேயே பயிற்சிகள் வழங்கி, திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

(12) விவசாயிகளின் வேளாண்மை முயற்சியில் இயந்திரங்களைக் கொண்டு உபயோகப்படுத்தி செலவுகளை குறைத்திட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? விவரத்தை தருக

ஆம். கண்டிப்பாக நம்புகிறோம். இயந்திரங்கள் செலவினத்தைக் குறைக்கின்றன. வேளாண்மைத்துறை மூலம் அனைத்துப் பணிகளுக்குமான இயந்திரங்களையும் குறைந்த வாடகையில், குறிப்பிட்ட காலங்களில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த இயந்திரங்களுக்கான டீசலை மானிய விலையில் வழங்கிட வேண்டும். இயந்திரங்கள் நிலங்களுக்கு எளிதாக கொண்டு செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். மானிய விலையில் கருவிகள் விநியோகிக்கப்பட வேண்டும்

(13) கலப்பு பண்ணையம் (வேளாண்மையுடன் கால்நடை செல்வங்களை வளர்த்தல்) மூலமாக வருவாயை அதிகரிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? விவரம் தருக.

ஆம். கண்டிப்பாக முடியும். நிச்சயமாக நம்புகிறோம். கால்நடைகள், கோழி வளர்ப்பு, மண்புழுக்கள் வளர்ப்பு என்ற துணைத் தொழில்களைக் கையாண்டு, தற்சார்பு வேளாண்மையில் ஈடுபட்டு நல்ல முறையில் வருமானம் ஈட்டலாம். ஏந்த இலவச அறிவிப்பையும் எதிர்நோக்க வேண்டியதில்லை. ஏனெனில் பால் உற்பத்தி மூலம் தினசரி வருமானமும், கோழி வளாப்பில் 3 மாதத்திற்கு ஒருமுறை வருமானமும், ஆடு வளர்ப்பில் 6 மாதத்திற்கு ஒருமுறை வருமானமும், மண்புழு உற்பத்தியில் ஓராண்டிற்கான உரச்செலவு மிஞ்சுவதாலும் லாபகரமானதாக உள்ளது. எனவே ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வாங்கிட கடன் வழங்கிட அரசு முன்வர வேண்டும்

(14) உங்கள் கிராமத்தில் நீங்கள் பாரம்பரியாக செய்யக்கூடிய பயிருக்கு பதிலாக மாற்றுப் பயிர் (மூலிகைää ப10ச்செடிகள் மரங்கள்ää பழ வகைகள்) கொண்டு வந்தால் விவசாயிகளுக்கு கூடுதலாக வருவாய் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா? அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் என்ன? அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.

நம்புகிறோம். அரசு நடவடிக்கை எடுத்து திட்டத்தை செயல்படுத்தும் போதுதான் விவசாயிகளுக்கு பலன்கள் சென்றடையும். அரசின் மூலம் மூலிகைப் பண்ணைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் மூலிகை பயிர்களின் பலன்கள் குறித்து பொதுமக்களுக்கும், பயிர் சாகுபடியில் உள்ள பலன்கள் குறித்து விவசாயிகளுக்கும் அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். அதேபோல் உற்பத்தியை சந்தைப்படுத்துதல், பயன்பாடு, விலை உத்தரவாதம் குறித்தும் அரசு உறுதி அளிக்க வேண்டும். எனினும் உணவு உற்பத்தியை விடுத்து, வருவாய்க்கென மாற்றுப் பயிர் சாகுபடிக்கு சென்று, இருப்பதையும் இழந்துவிடும் நிலை தேவையானதா என யோசிக்க வேண்டும்.

(15) உங்கள் பகுதியில் விளைபொருட்கள் சேமித்து வைக்கக் கூடிய சேமிப்பு கிடங்கு உருவாக்கவேண்டுமென்று கோருகிறீர்களா? தேவையெனில் அதற்கான தங்களது முயற்சி என்ன? அரங்சாங்கத்திடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம். சேமிப்புக் கிடங்குகள் அவசியம் தேவை. அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். கிராமங்களில் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் சேமிப்பு கிடங்குகள் உருவாக்க வேண்டும். தனி நபர்கள் செயல்படுத்த அதிக மானியம் வழங்கினால் கிடங்குகளின் பராமரிப்பு நன்றாக இருக்கும். அரசின் திட்டம் என்னவென்று தெரியவந்தால் விவசாயிகள் இணைத்து செயல்பட முடியும். எனவே சேமிப்பு கிடங்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்து தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

(16) உங்கள் பகுதிகளில் நிலத்தடி நீர் வலுப்படுத்தப்படுவதற்கான கீழ்க்கண்ட முயற்சிகளை எடுக்கவேண்டுமென்று நீங்கள் நம்புகீறிர்களா?
(i) தடுப்பணை கட்டுதல்
(ii) ஏரி குளங்களை ஆழப்படுத்துதல்
(iii) கிணற்றிற்கு செயற்கைமுறையில் செறிவ10ட்டல்
(iv) பண்ணைக் குட்டைகள் அமைத்தல்
(v) மழைநீர் சேகரிப்பு அமைப்பு

ஆம். மேற்கண்ட முறைகளை நடைமுறைப்படுத்த அவசியம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

(17) விவசாய விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உருவாக்கவேண்டுமென்று எண்ணுகிறீர்களா? அதற்கான உங்களின் முயற்சி என்ன? அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம். அவசியம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். கிராமம் தோறும் அல்லது ஒன்றியம் வாரியாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது இயங்கிவரும் விற்பனைக்கூடங்கள் சரியான முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிராமங்களில் 15 நாட்களுக்கு ஒருமுறை விற்பனை ஏலம் நடத்தப்பட வேண்டும். விற்பனைக் கூடங்கள் அமைக்க நிதி ஆதாரம், கட்டிட வசதி மற்றும் அலுவலர்கள் நியமனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(18) நகர்ப்புற வளர்ச்சியாலும் தொழில் வளர்ச்சியாலும் கிராமப்புறங்களில் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதாக நீங்கள் கருதுகிறீர்களா? அதை தடுப்பதற்கான உளமார்ந்த உங்களது முயற்சி என்ன? அரசிடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள்?

ஆம். நகர்ப்புறத்தில் இருந்து வரும் கழிவு நீர் கிராமப்புற விவசாய நிலங்களுக்கு சென்று நிலத்தடி நீர்; மாசுபடுகிறது. எனவே நகர்ப்புற எல்லையை விட்டு தண்ணீர் செல்வதற்கு முன்பு தண்ணீரை சுத்தம் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் தண்ணீர் செல்ல வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஓவ்வொரு தொழிற்காலையிலும் கழிவுநீர்; சுத்திகரிப்பு நிலையங்கள் கண்டிப்பாக இயங்க வேண்டும். பாசன வாய்க்கால்களில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்.

(19) கிராமப்புறங்களில் விவசாயிகள் பெறக்கூடிய சொற்ப வருவாயையும் நகர்ப்புறங்களில் செலவழிக்கப்படுகிறது. அதன்விளைவாக கிராமப்புறங்களில் பணப்புழக்கம் ஒன்றுமே இல்லை. கிராமப்புறத்தில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான வழி என்ன?

கிராமப்புறங்களில் பணப்புழக்கத்தைப் பெருக்க வேளாண் விளை பொருள் சந்தைகளை கிராமங்களுக்கு கொண்டு வர வேண்டும். நகரங்களில் கிடைக்கும் வசதிகளை கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். நுகர்வு கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு அவசியம். இயற்கையான வாழ்க்கை இனிக்கும் என்பதை சிறு குழந்தை முதல் பழக்கப்படுத்த வேண்டும். ஓவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஓர் அரசு அலுவலகம் கண்டிப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமங்களில் வங்கிகள் துவங்கப்பட வேண்டும். விளைபொருட்களை லாப முறையில் விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்கறி, பால் உற்பத்தி, கால்நடைகள் மற்றும் பறவைகள் உற்பத்தி மூலம் இறைச்சி உற்பத்தி, மலர்கள் சாகுபடி போன்ற தொழில்களை உருவாக்குவதன் மூலம், விற்பனையில் நாள்தோறும் நகர நுகர்வோரிடமிருந்து கிராமங்களுக்கு வருவாய் வரும். பணப்புழக்கம் இருக்கும். கிராமங்களில் வேளாண் விற்பனை நிலையங்கள் துவக்கி செயல்படுத்தினால், நகர மக்கள், கிராமங்களுக்கு வந்து விளைபொருட்களை வாங்கி செல்கையில் பணப்புழக்கம் பெருகும். சிக்கனம் மற்றும் சேமிப்பு முறைகளை கிராம மக்களுக்கு உருவாக்க வேண்டும்.

(20) கிராமப்புறங்களிலிருந்து மக்கள் நகரங்களை நோக்கி வெளியேறும் சூழல் இருக்கிறதே அதற்கு முக்கியமான காரணங்கள் என்ன? இந்த நிலை மாற்றுவதற்கு உங்களது முயற்சி என்ன? அரசாங்கத்திடம் எதை எதிர்பார்க்கிறீர்கள்?

பொருளாதாரம், தொழில், வேலைவாய்ப்பு காரணமாக வெளியேற வேண்டியுள்ளது. கிராமங்களில் சிறுதொழில் மற்றும் கைத்தொழில்களை உருவாக்க வேண்டும். வருவாய் குறைவு, நகரங்களில் அதிக கூலி, பொழுது போக்கு அம்சங்கள் காரணமாக வெளியேற வாய்ப்புள்ளது. இவை கிராமங்களில் உருவாக்கப்பட்டால், நகரங்களை நோக்கி யாரும் செல்லமாட்டார்கள். விவசாயத்தில் வருவாய் குறைவால் ஆர்வமும், ஆதரவும் குறைந்து கிராமத்தை விட்டுச் செல்ல நேரிடுகிறது. குல்வி கற்றோர் எல்லாம் வயலுக்குள் கால் பதிக்காமல், நகரத்தை நோக்கிச் செல்கின்றனர். முக்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கிராமத்திலேயே கிடைத்தால் யாரும் வெளியேற வாய்ப்பில்லை. குல்வி மற்றும் மருத்துவ வசதிகள் நகரங்களில் அதிக அளவில் கிடைப்பதே கிராமத்தை விட்டுச் செல்லக் காரணம்

(21) கிராமப்புறங்களில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள் அவர்கள் கிராமங்களுக்கு வந்து குறிப்பாக விவசாயிகளுடைய பிரச்சினைகளை அறிந்து தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கிறார்களா என்று நீங்கள் நம்புகிறீர்களா? இல்லையெனில் விவரம் தருக.

கிராமங்களில் பணிபுரிவோர் எவரும் அங்கு தங்குவதில்லை. அரசுப் பணியிலிருப்பதற்காக மட்டுமே கிராமங்களில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அங்கு தங்கிட ஏதுவாக அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். வற்புறுத்தலின்பேரில் செயல்படாமல் சுய ஆர்வத்துடன் அவர்களை செயல்பட வைக்க வேண்டும். அதிகாரிகள் கிராமத்தில் தங்கி செயல்பட்டு, மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறிந்து நன்மை செய்ய பாடுபட வேண்டும்.

(22) அரசின் எந்த துறையிடமிருந்து விவசாயிகளின் மேம்பாட்டிற்கு அதிக அளவிற்கு பணிகளை எதிர்பார்க்கிறீர்கள்? அவை எந்தவகையில் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?

தற்போதுள்ள சூழ்நிலையில் பெரும்பாலான விவசாயிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளதால், நிதித்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, மின்சார வாரியம், கூட்டுறவுத்துறை உட்பட அனைத்து துறைகளும் கிராமங்களுக்கும், விவசாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து அவர்களது குறைகளை நிவிர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.

(23) பாடுபடும் விவசாயிகளும் - பணியாற்றும் அரசு அலுவலர்களும் உளமாற ஒன்றுசேர்ந்து முயற்சித்தால் கிராமங்களின் வளர்ச்சி சாத்தியம் என நீங்கள் நம்புகிறீர்களா? விபரம் தருக.

ஆம். நிச்சயம் கிராமங்கள் உயரும். பாடுபடும் விவசாயிகளும், பணியாற்றும்; அரசு அதிகாரிகளும் உளமாற ஒன்றுசேர்ந்தால் இந்திய வேளாண்மை உயரும். நீடித்த, நிலைத்த தன்மையிலான வேளாண்மை வளர்ச்சி இருக்கும். கிராமத்திற்கு வந்து அடிக்கடி அதிகாரிகள் மக்களை சந்தித்தால் கிராம வளர்ச்சி சாத்தியமடையும். கிராமத்திற்கு வந்து விவசாயிகளை சந்திப்பதே அவமானம் என்று அதிகாரிகள் நினைக்கும் நிலை மாற வே;ணடும். தொழில்கூடங்களை அதிக அளவில் கிராமப்புறங்களில் அமைக்க வேண்டும். கிராமப்புறங்களில் குடியிருக்கும் ஓய்வுப் பெற்ற அரசு அதிகாரிகள் கிராம மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசு அதிகாரிகள், மனித நேயம், தியாக உணர்வு, கடமை உணர்வு மற்றும் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும். 'பாரத நாடு பழம்பெரும் நாடு, விவசாயிகளே இதற்கு முதுகெலும்பு' என்ற சொல் நிறைவேறும். இது சாத்தியம் மட்டும் அல்ல சத்தியமும் கூட.