Tuesday, April 26, 2011

பனை நுங்கு வியாபாரம்

சுரண்டை அருகே கடையாலுருட்டி பகுதியில் பனை நுங்கு வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.​

சித்திரை மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கி தற்போது கோடை வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.​ திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.​ பகல் நேரத்தில் அனல் காற்றும்,​​ இரவு நேரத்தில் புழுக்கமும் ஏற்படுகிறது.​ இதனால் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல்,​​ வெம்மையை தணித்துக் கொள்ள குளிர்பானங்கள்,​​ பழவகைகள் என பல வழிகளை மக்கள் நாடுகின்றனர்.​ அதேபோல் இளநீர்,​​ வெள்ளரிக்காய்,​​ தர்ப்பூசணி ஆகியவற்றையும் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படுத்துகின்றனர்.​ கோடைக்காலம் என்பதால் இளநீர் ஒன்று ரூ.20 வரை விற்கப்படுகிறது.​ வெள்ளரிக்காய் மற்றும் தர்ப்பூசணிக்கும் குறைந்தபட்சம் ரூ.5 கொடுக்க வேண்டியுள்ளது.

0 comments: