Wednesday, May 4, 2011

தெளிப்பு நீர் பாசன முறை

வாய்க்கால் நீர் பாசன முறையில் செய்யப்படும் விவசாயத்தில் செலவாகும் நீரில் மூன்றில் ஒரு பங்கு இருந்தாலே இந்த முறைக்கு போதுமானது. இதனால் குறைவான தண்ணீரில் அதிக பரப்பில் பயிர் செய்யலாம். கிணற்றில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீரை இந்த முறையில் "ரெயின் கன்' மூலம் 120 அடி விட்டத்திற்கு மழைத்துளி போன்று பயிர்களின் மேல் நீர் தெளிக்கலாம். வால்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தேவையான பகுதிக்கு மட்டும் நீர் தெளிக்கலாம். இதன் மூலம் உரம், பூச்சி மருந்து ஆகியவற்றையும் பயிர்களுக்கு எளிதாக தெளிக்கலாம். தெளிப்பு முறை கருவி குறைந்தது 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய் வரை விலையில் உள்ளது. இதனால் ஆள் பிரச்னையும் குறையும், தண்ணீரும் மீதமாகும். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம்.

நன்மைகள்:
தெளிப்பு நீர் பாசனத்தால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம்.
நீர் சேமிப்பால் அதிக அளவு பயிர் செய்யலாம்.
வரப்பு பாத்தி அமைக்க வேண்டாம் ஆள் பிரச்னையும் குறையும்.
நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
மலைப்பகுதி மற்றும் மேடுபள்ளங்கள் நிறைந்த பகுதிகளுக்கம் ஏற்றது
பூக்கள் எளிதில் கொட்டாத பயிர்களுக்கும் ஏற்றது.
சாதாரண பாசன முறையை விட 30-40 சதவீதம் நீர் குறைவு.

குறைபாடுகள்:
இதனை அமைக்க ஆகும் செலவு அதிகம்
விவசாயிகளிடம் நிலப்பரப்பு குறைவு.
காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் போது பயன்படுத்த முடியாது.

0 comments: