
தர்பூசனி நீர் தேங்கி நிற்காத மண் வகைகளில் நன்கு வளரும். NS - 295 (Namdhari), Riya (sinnova company), SPW - 10 (SPIC), PKM 1, Sugar baby, Manik, Jothi, Bedana, Durgapuri, Meetha, Durgapura keesar, Amruth போன்றவை தமிழக சூழ்நிலைக்கு ஏற்றவை.பழ தோட்டம் மற்றும் தென்னை தோட்டத்தில் ஊடுபயிராக இவற்றை வளர்க்களாம்.பெண் மலர்களின் எண்ணிக்கையை பொருத்தே இதன் விளைச்சல் அமைவதால், பெண் மலர்களின் எண்ணிக்கையை பெருக்குவது மிகவும் அவசியம்.அதற்கு 2.5 மில்லி எத்திரலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 15 நாளில் தெளிக்க வேண்டும். அதற்கு பிறகும் 1 வார இடைவெளியில் இதை தொடர்ந்து தெளிக்க வேண்டும். சத்து குறைவினால் பழங்களில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.அதை தவிர்க்க 4 - 5 கிலோ நன்றாக மக்கிய தொழு உரத்தை ஒவ்வொரு செடிக்கும் அளிக்க வேண்டும். இதை பின்பற்றினால் தர்பூசனியில் நல்ல விளைச்சல் பெறலாம்.
0 comments:
Post a Comment