Wednesday, May 4, 2011

சொட்டு நீர் பாசன முறை

நீர் வளம் குறைந்து போனதால், பாரம் பரிய விவசாயத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிடைக்கும் குறைவான நீரை, சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என்பதற்காக சொட்டு நீர் பாசனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், அதுவரை வாய்க்கால்கள் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் முறை மாற்றப்பட்டு, குழாய்கள் மூலம் நீர் சொட்டு, சொட்டாக பயிர்களுக்கு தேவையான நீரை, அதன் வேர்ப்பகுதிக்கே பாய்ச்சப்படுகிறது ஒரு ஏக்கரில் வாய்க்கால் அமைத்து நீர் பாய்ச்சல் முறையில் 60 சதவீத பரப்பில் மட்டும் பயிர் செய்ய முடியும். சொட்டுநீர் பாசன முறையில் 100 சதவீத பரப்பளவில் பயிர் செய்யலாம், அதிக லாபம் பெறும் வாய்ப்பை சொட்டு நீர் பாசனம் ஏற்படுத்தி கொடுக்கிறது.

நன்மைகள்:
களைச் செடிகள் நீரின்றி வளர இயலாது.
மகசூலை அதிகப்படுத்தும்
சாதாரண பாசனத்தை ஒப்பிடுகையில், 70% நீரை இப்பாசனத்தின் மூலம் சேமிக்கலாம். அவ்வாறு சேமித்த நீரைக் கொண்டு இன்னும் அதிகமான நிலங்களுக்கு பாசனம் அளிக்கலாம்.
பயிர் திடமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்வதோடு, வேகமாக முதிர்ச்சி அடையும்
விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த காலத்தில் முதலீட்டுக்கான வரவு கிடைத்து விடும்
உரம் பயன்பாட்டு திறனில் 30% அதிகம்
உரம், ஊடுபணி மற்றும் ஆட்களுக்காக ஆகும் செலவும் குறைக்கப்படும்
நீரில் கரையும் உரத்தை குழாய்கள் மூலமே கொடுக்கலாம்.
ஏற்ற இறக்கம் உடைய நிலங்கள், உப்பு நிலம், நீர்தேங்கும் நிலம் மணற்பாங்கான மற்றும் மலை பகுதிகள் அனைத்தையும் இப் பாசனத்தின் கீழ் கொண்டுவந்து சாகுபடி செய்யலாம்


குறைபாடுகள்:
இதனை அமைக்க ஆகும் செலவு அதிகம்
சொட்டு நீர் குழாய் அடைப்பு.
சாகுபடி நிலம் அதிகமாக வெப்பம் அடைகிறது

0 comments: