Monday, September 14, 2009

செம்மை நெல் சாகுபடி முறை மூலம் சட்டிஸ்கரில் உணவு மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு – அனுபவங்கள் மற்றும் அறிவுறைகள்

கேள்வி : செம்மை நெல் சாகுபடி முறை மூலம் சட்டிஸ்கரில் உணவு மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு – அனுபவங்கள் மற்றும் அறிவுறைகள்.

தொகுத்தவர்கள் : கோபி கோஷ் மற்றும் ராணு போகல்
தேதி : ஜனவரி 23, 2009

திருந்திய நெல் சாகுபடி முறையில் சந்தேகத்தை கேட்டவர், மானாஸ் சத்பாதி, பிரதான், பூவனேஸ்வர்

நான் பிரதானில் வேலை செய்கிறேன். இந்தியாவில் பல இடங்களில், செம்மை நெல் சாகுபடி முறைக்கு கிடைத்த வெற்றியால், ஏழை விவசாயின் உணவு பாதுகாப்பிற்காக, இந்த தொழில் நுட்பத்தை பஸ்தர் மற்றும் சட்டிஸ்கரின் மலை பகுதிகளுக்கு, ஏனைய அரசு சாரா நிவனங்களுடன் இணைந்து கொண்டு செல்ல நினைக்கிறேன். எங்கள் அனுபவத்தில், பண்ணை மற்றும் பண்ணைசாராமல் வாழ்பவர்களுடைய, உணவு பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டால், அவர்களுடைய வாழ்க்கை தரம் உயர்ந்துவிடும். இல்லையென்றால், அவர்கள் இயற்கை வளங்களை போதுமான அளவு உபயோகபடுத்தாமல், கூலி வேலையை எதிர்பார்த்து கொண்டிருப்பர்.
மேலும் விவசாயத்திலிருந்து வரும் வருமானம் குறைவாக இருப்பதால், விவசாயிகளை, அவர்கள் நிலத்தின் மகசூலை பெருக்க ஊக்குவிப்பது கடினமாகும். இந்த பகுதியில் விவசாயிகளின் சராசரி நில அளவு அரை ஹெக்டர் ஆகும். மானாவரியில் வழக்கமான முறையில் மிகக்குறைந்த முதலீட்டில் சாகுபடி செய்யும் விவசாயிக்கு, Êசராசரி அரை ஹெக்டர் நிலத்தில், ஒரு டன் நெல் கிடைக்கும். ஆனால் ஒரு குடும்பத்திற்கு உணவு பாதுகாப்பிற்காக தேவைப்படும் நெல்லின் அளவு 2.4 டன் ஆகும்.
செம்மை நெல் சாகுபடி முறையை பின்பற்றுவது மூலம் நெல்லின் மகசூலை, வழக்கமான 1-2 டன் / ஹெக்டர்லிருந்து 8-10 டன் /ஹெக்டர் வரை அதிகப்படுத்தலாம். ஆனால் இந்த பகுதியில், இந்த முறையை கடைபிடிப்பதற்கு சில சவால்களை எதிர் கொள்ள வேண்டும். அவையாவன;
1. திருந்திய நெல் சாகுபடி முறையில், குறிபிட்ட நாற்று வயதில் நடவேண்டும். மேலும், நிலத்தை உளர்த்தல் மற்றும் ஈரப்பதத்திற்கு மாறி மாறி கொண்டு வரவேண்டும். இதை மழையை சார்ந்த சாகுபடியில் கடைபிடிப்பது கடினம்.
2. திருந்திய நெல் சாகுபடியை 3-4 வருடங்கள் கடைபிடித்த பின்னரும், மண் வளத்தை மற்றும் நிலையான மகசூலையும் பெறுவது கடினம்.

பஸ்தர் மற்றும் சட்டிஸ்கரின் வடமலை பகுதிகளில் வெற்றிகரமாக, இந்த முறையை தொடங்குவதற்கு உறுப்பினர்கள், கீழே குறிப்பிட்டு உள்ளவைகளுக்கு கருத்தினை தெரிவிக்குமாரு கேட்டுக் கொள்கிறேன்.

  • இந்த பகுதியின் விவசாயிக்கு எந்த விதமான சாகுபடி நுட்பங்களை செம்மை நெல் சாகுபடி முறையில் பின்பற்றலாம்.
  • போதுமான மகசூல் தொடர்ந்து கிடைப்பதற்கு எந்த விதமான இயற்கை வேளாண் முறையை பின்பற்றலாம். விவாயிகள் இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லிகளை சற்றும் உபயோகிக்காமலையே இருக்க முடியுமா?
  • எந்த விதமான குறைந்த விலை கருவிகள், இம்முறையில் நடுவதற்கும் களை எடுப்பதற்கும் உபயோகிக்கலாம்.
  • நிறைய விவசாயிகள் உயர் மற்றும் சற்றும் குறைந்த நில பகுதிகளில் விதைகளை தூவும் முறையை பின்பற்றுகிறார்கள். எனவே எந்த விதமான செம்மை நெல் சாகுபடி முறையை பின்பற்றினால் இவர்களின் மகசூல் பெருகும்.
  • இம்முறையில், பாரம்பரிய இரகத்தை உபயோகித்து எடுத்த மகசூலின் அளவை உறுபினர்கள் குறிப்பிடவும்.

இந்த கேள்விகளுக்குபதில் அளித்தவர்கள்

  • அருண் ஜின்டால், சொஸைட்டி பார் சஸ்டைனபில் டெவளப்மெண்ட் (SSD), கரோலி, இராஜஸ்தான்.
  • தெபஸிஸ் மொகபத்ரா, OXFAM GB ஆப்கானிஸ்தான், காபூல், ஆப்கானிஸ்தான்
  • ராஜ் கங்குலி, கன்சல்டன்ட், புது டெல்லி
  • ஹிம்மான் தக்கார், சவூத் ஆசியா நெட்வோர்க் ஆன் டாம்ஸ், ரிவர்ஸ், பீப்புள், புதுடெல்லி
  • K.K.டத்தா, நேஷனல் சென்டர் ஃபார் அக்ரிகல்சரல் எக்னாமிக்ஸ் அன்ட் பாலிஸி ரிசெர்ச், புதுடெல்லி.
  • சதீஷ் சிரிவஸ்தா, ஸ்டெட் நீயூடிரிஷன் கன்சல்டண்ட், RCH/NRHM மத்திய பிரதேசஷ்
  • பிரபாத் குமார், ஏசியன் இன்ஸ்டியூட் ஆஃ டெக்னாலோஜி, தாய்லாந்து
  • நார்மன் உப்ஹாப்ஃ, கார்னல் பல்கலைகழகம், நீயு யார்க் யூனைட்ட ஸ்டேட்ஸ்.

பதில்களின் தொகுப்பு

அனுபவங்களின் தொகுப்பு

பதில்களின் தொகுப்பு
செம்மை நெல் சாகுபடி (SRI) முறையானது, அதிக மகசூல் மற்றும் வேறுசில நன்மைகளையும் அளிக்கவல்லது. அவையாவன, குறைந்த நீர் மற்றும் ஆட்கள் தேவைப்படுவதால் குறைந்த முதலீடு, விரைவான பயிர் முதிர்ச்சி, உயிர் மற்றும் உயிரற்றவவைகளால் உண்டாகும் தாக்கத்திற்கு எதிர்ப்புதன்மை, அதிக அறவை சதவீகிதம் மற்றும் பல. மானாவரி செம்மை நெல் சாகுபடி முறைக்கான தொழில்நுட்பங்களை, இதேமாதிரியான பகுதிகளில், இம்முறையை கடைப்பிடித்தவர்களின் அனுபவங்களை உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த அனுபவங்கள், சட்டீஸ்கர் போன்ற இடங்களில் செம்மை நெல் சாகுபடி முறையை மேற்கொள்ள பெரிய அளவில் பயன்படும்.
விடையளித்தவர்கள், இப்பகுதிகளில் முக்கிய சவாலே, நீர் மேலாண்மை என்றனர். மழைசார்ந்த விவசாயத்தில், குறிபிட்ட காலத்தில் நாற்று நடுதல் மற்றும் நிலத்தை உலர்த்துதல் மற்றும் நீர் பாய்ச்சுதல் கடினமான செயலாகும். இந்த சாவலை எதிர்கொள்ள, 25 வருடங்களுக்கு முன் மடகாச்கரில், ஹென்றி டி லாலானியால், வடிவமைக்கபட்ட, செம்மை நெல் சாகுபடி முறையில் சில மாறுதல்களை கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை கூறியுள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்தில், நடுவதற்கான சவாலை எதிர்கொள்ளுவதற்கு, மேற்கு வங்காளத்தில் கையாலும் முறையை பின்பற்றலாம் என்று உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளத்தில், விவசாயிகள் 10 நாட்கள் இடைவெளியில், 3 நாற்றாங்காலை விதைப்பார்கள். இதனால், சரியான வயதையுடைய (5-15 நாட்கள்) நாற்றை நடுவதற்கான வாய்ப்பு, 6வாரங்கள் வரை கிடைக்கும். இதனால், பருவமழையை பொறுத்து, குறிப்பிட்ட காலத்தில் நடலாம். ஆனால், இம்முறையில் 70% விதைகளையே சேமிக்க முடியும் (செம்மை நெல் சாகுபடியில் 90% விதையை சேமிக்கலாம்). நாற்றாங்கால் வீண் அடிக்கப்பட்டாலும், மகசூலில் கிடைக்கும் லாபத்தினால், அந்த நஷ்டம் பெரிதாக தெரியாது.

25 x 25 சென்டிமீட்டர் இடைவெளியை, குறித்து கொண்டு, முளைத்த விதையை நேரடியாக நிலத்தில் விதைக்கலாம். இதில் தாய்லாந்தில் கையாளப்படும் விதை தெளிப்பு முறையை பின்பற்றி, விதைத்த 3 - 4 வாரங்களில், செடியின் அடர்த்தியை குறைத்துவிடலாம். நிலத்தின் அளவு மற்றும் வேலையாட்கள் கிடைப்பதை பொறுத்து, விவசாயிகள் நடுவதையோ அல்லது நேரடி விதைப்பையோ பின்பற்றலாம். ஒரு ஹெக்டருக்கு மேல் உள்ள நிலத்திற்கு நேரடி விதைப்பே சரியானதென்று உறுப்பினர்கள் கருத்து தெரிவேத்னர். இது தொடர்பாக இலங்கையில், செம்மை நெல் சாகுபடி முறையை பின்பற்றி கிடைத்த மகசூலை பற்றியும் குறிப்பிட்டுள்ளனர்.

நீர் மேலாண்மை, இடஅமைப்பு, மழைவீச்சி, மண் நீர் பிடிதிறன் ஆகியவற்றை பொருத்து இருப்பதால், மானாவாரி திருந்திய நெல் சாகுபடியில், நீர் கட்டுபாடு கடினமாகும். ஆகையால், இப்பகுதியில் நீரை நீண்டநாட்கள் தேங்கவிடக்கூடாது. அதிகப்படியான நீரை வெளியேற்ற மட்டமான நிலத்தையும், நிலத்தை சுற்றிவடிகால் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்று கருத்தை தெரிவித்துள்ளனர். உறுப்பினர்கள், மானாவரி முறையில், செடியை வளர்ப்பதைவிட, வேரை வளர்க்கவேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். எனவே, வேரை அடிக்கடி ஆய்வு செய்யவேண்டும். மேலும் மண் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏன்னென்றால், இதுவே நீர் மேலாண்மைக்கு அவசியமாகும்.
இப்பகுதியில், மண் வளம் மற்றும் நிலைக்கும் மகசூலை, பராமரிக்கும் சவாலை எதிர்கொள்வதற்கு, இயற்கை உரங்கள் ஒரு முக்கியமான விஷயம் என்று கூறியுள்ளனர். மடகாஸ்கர் நாட்டின் அனுபவங்களை எடுத்துரைத்து, உறுப்பினர்கள், இயற்கை உரங்கள் (குறிப்பாக நெல் வைக்கோல்) மண்ணில் சேர்த்தல், மகசூலை அதிகமாகவும் மற்றும் நிலையானதாகவும் ஆக்கும் என்று கூறியுள்ளனர். மேலும் விரைவாக விளையக்கூடிய பயறு வகை பயிர்களான செஸ்பேன்யா, கிளைரிசிடா போன்றவைகளை சாகுபடி செய்தல் நிலத்தில் தழைச்சத்து அதிகமாக ஏதுவாகும். மேலும் தாய்லாந்தில், நேரடியாக விதைக்கும் SRI யில், வரிசை இடைவெளியில், பச்சைபயிரை தூவி அதை விதைத்த 35 நாட்களில் மண்ணுக்குள் மடக்கிவிடுதல் வழக்கமாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.
பஸ்தர் மற்றும் சட்டீஸ்கரின் வடபகுதியில் உள்ள விவசாயிகளின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கலந்து ஆலோசிப்பவர்கள், இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிகொல்லிகளை உபயோகிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் SRI முறையில், எரு உரங்களை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லையென்றும், வளம் குறைவாக உள்ள மண்ணில், இரசாயன உரங்கள் பயன்படுத்தபடுவதையும் கூறியுள்ளனர். மேலும், மக்குப்பையை அதிகமாகவும் நேர்த்தியாகவும் உபயோகப்படுத்தினால், வழக்கமான மகசூலைவிட அதிகமாக கொடுக்கும், என்று கூறியுள்ளனர். மேலும், அவர்கள், மண்ணை வளர்த்தல் தான், மண்ணானது செடியை வளர்க்கும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பயிர் மேலாண்மையை மிக நேர்த்தியாக கையாண்டால், பூச்சி மற்றும் நோய் பயிரை தாக்காது. இதனால் இரசாயன பொருள்களை உபயோகப்படுத்த அவசியமில்லை என்றும் கூறியுள்ளனர்.

பல இடங்களில், பாரம்பரிய இரகங்கள் மிகச்சிறந்த மகசூலை, செம்மை நெல் சாகுபடி முறையில் கொடுத்துள்ளதையும், இதனால் பல பாரம்பரிய இரகங்களை இம்முறையில் பரிசோதிக்க வேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளனர். இலங்கையில், SRI யில், மேம்படுத்தப்பட்ட இரகங்களைவிட, பாரம்பரிய இரகங்கள் சற்றுகுறைந்த மகசூலை அளித்திருந்தாலும், சந்தையில் மதிப்பில் பாரம்பரிய இரகங்கள் அதிக பணம் கொடுப்பதையும் மேற்கோள்காட்டியுள்ளனர். எனவே, விவசாயிகள் நிலம், ஆள், நீர் மற்றும் பொருள் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இறுதியில் பஸ்தர் விவசாயிகளுக்கான சாகுபடி நுட்பங்கள் பற்றிய கேள்விக்கு, பல நுட்பங்களை ஒன்றாக்கி உருவாக்கவேண்டும், என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனால் வட்டார பகுதிக்கு ஏற்ப, நாற்றின் வயது, இடைவெளி, ஒரு கொத்தில் செடியளவு, நீர் மேலாண்மை, களையெடுத்தலின் எண்ணிக்கை மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகியவைகளை வகுக்கவேண்டும். மேலும் அறிவியலாளர்கள், பங்குபெறுவோர், விவசாயிகள் இவர்கள் அனைவரும் கலந்து, தகுந்த சாகுபடி நுட்பங்கள் வகுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மொத்தத்தில், செம்மை நெல் சாகுபடியில், நிறைய நன்மைகள் இருப்பதையும், ஆனால் துல்லியமாகவும் சவால்களை நேர்த்தியாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர். முடிக்கும் வகையில், பல இடங்களில், SRI பாசனத்தில் நன்றாக செயல்பட்டதையும், மானாவாரி பகுதியில் வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதையும் சுட்டிக்காட்டி, சட்டீஸ்கர் விவசாயிகள் இதை உணர வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.

அனுபவங்களின் தொகுப்பு
தேசிய அளவில்
மேற்கு வங்காளம்
மழைக்கு ஏற்பசெம்மை நெல் சாகுபடி, புருளியா மாவட்டம் (நார்மன் உப்ஹாப்ஃ, கார்னல் பல்கலைகழகம், நீயூயார்க், USA)

செம்மை நெல் சாகுபடி செய்த விவசாயிகள், நெல்லில் 7.7 டன் மகசூலை ஒரு ஹெக்டர்க்கு பெற்றுள்ளனர். இந்த பயிரில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்கியன. மேலும் நடும்பொழுதும் மற்றும் விதைகட்டும் பருவத்தில், வறட்சியும் ஏற்பட்டது. இருந்தபோதும், இந்த வெற்றிக்கு காரணம், அவர்கள் பாரம்பரிய இரகத்தையும், தேவையான இடைவெளி மற்றும் மழை அளவுக்கு ஏற்ப பயிர்த்திட்டத்தை வகுத்துக்கொண்டதாகும்.

தமிழ்நாடு
பாலசுந்தரம்கிராமம், பழனி தாலுக்கா, திண்டுகல் மாவட்டத்தின் விவசாயிகள், செம்மை நெல் சாகுபடிமூலம் போதுமான மகசூலை பெற்றுள்ளனர் (ராஜ் கங்குலி, கன்சல்டண்ட், புதுடெல்லி).

இப்பகுதியில் விவசாயிகள், மக்காச் சோளத்தை பயிரிட்டுவந்தனர். ஆனால் மாநில வேளாண்துறையின் தூண்டுதலால் மிகக்குறைந்த முதலீட்டில், செம்மை நெல் சாகுபடி முறையில் அதிக மகசூலை பெறுகின்றனர். இப்பொழுது இம்முறையில் 14.27 டன் மகசூலை ஒரு ஹெக்டருக்கு கண்டுள்ளனர். இது வழக்கமாக அவர்்களின் மகசூலைவிட இரண்டு மடங்கு ஆகும். நிறைய விவசாயிகள் இம்முறையை இப்பொழுது கடைபிடிக்கின்றனர்.

புதுச்சேரி
என்டியூரில், பெண்விவசாயிகள் செம்மை நெல்சாகுபடி முறையில் சாதனை புரிகின்றனர். (ராஜ்கங்குலி, புதுடெல்லி)

சில பெண்கள், தங்களின் ஒரு பகுதி நிலத்தில் இம்முறையை செய்கிறார்கள். மிகுந்த தயக்கத்துடன் நிலத்தை, இவர்களுக்கு கொடுத்த அவர்களது வீட்டார், பின்னர், SRI முறையை பின்பற்றி, அரை ஏக்கரில் 23.5 மூட்டை நெல்லை அறுவடை செய்ததை கண்டு வியக்கிகின்றனர். வழக்கமாக, ஒரு ஏக்கருக்கு 29 மூட்டை தான் கிடைக்கும். இதனால், அவர்கள் குடும்பம் SRI முறையில் திருப்தியடைந்து, இப்பொழுது தங்கள் மொத்த நிலத்தையும் SRI முறைக்கு மாற்றிவருகின்றனர்.

உலகளவில்
தாய்லாந்து
ஊடு பயிருடனும் SRIமுறையை கையாளலாம். (பிரபாத்குமார், ஏசியன்இன்ஸ்டியுட் ஆஃ டெக்னாலஜி, பேங்காக்)
ஒரு சோதனை திட்டத்தில், SRI முறையை, ஈரபதமான நிலத்திலும், வழக்கமான நீர்கட்டி சாகுபடிமுறையிலும், கடைபிடித்ததில், ஈரப்பத முறை, நீர்கட்டு முறையை போன்றே மகசூல் அளித்தது. SRI முறையில் ஊடுபயிரான, பாசிபயிர், மிகுந்த தழையுடன், மணல் ஈரத்தை பாதுகாப்பும் அளித்தது.

கம்போடியா
நிலையான நெல்மகசூல் (டி.என் அனுராதா, ஆராய்ச்சி ஆலோசகர்)

1190-ல், 28 விவசாயிகள் SRI முறையில், மானாவரி நிலங்களை சாகுபடிசெய்தனர். இது, வழக்கமாக ஒரு ஹெக்டர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் மகசூலான 1.65-1.8 டன் காட்டிலும் அதிகமாக, 5டன்/ஹெக்டர் மகசூலை அளித்தது. 2001 லிருந்து, 500விவசாயிகள் இம்முறையை பின்பற்றினர். 393 விவசாயிகளில், பாதிக்கும் மேற்பட்டோர், 3 டன்/ஹெக்டர் மகசூலைப் பெற்றனர். சுமார் 57 பேர், 5 டன்னும், 3 பேர் 10டன்/ஹெக்டரும் பெற்றுள்ளனர்.

0 comments: